Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி.. ஆனால்.. ஆசையை நைசா சொன்ன சீரியல் நடிகை !
சென்னை : சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி என கூறியுள்ளது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி.
ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி என பல சீரியல்களில் நடித்து நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீநிதி
சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதைவிட, ஒரே ஒரு சீரியலில் நடித்து இல்லதரசிகளின் மனதில் இடம் பிடித்து விரைவில் புகழின் உச்சிக்கு பலர் சென்றுவிடுகின்றனர். அப்படி பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீதொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
பொறுமை இல்லை
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் வலிமை படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். அதாவது, வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது என்று மீடியாவில் ஸ்ரீநிதியிடம் கேட்க, அஜீத் சாரை நேரில் கூட பார்த்து விடலாம். ஆனால் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை என்று கூறியுள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித்தீர்த்தனர்.
திருமணம் செய்துகொள்ளலாமே
தற்போது, ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள்... நானும் சிம்புவும் தான் மீதம் இருப்போம்' என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், நீங்கள் இரண்டு பேரும் ஏன்? திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கேட்டு ஒரு பதிவினை போட்டு உள்ளார்.
உங்களுக்கு ஆள் இருக்கா ?
அதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீநிதி, நன்றாக தான் இருக்கும். ஆனால், எனக்கு இப்போ ஆள் இருக்கே என கூறியுள்ளார். சிம்புவை கல்யாணம் பண்ணிக்க இருக்கும் ஆசையை நைசா கூறியுள்ளார் ஸ்ரீநிதி. இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் பெரிய நடிகர்கள் பற்றி பேசினால், பிரபலமாகிவிடலாம் என்பதால் ஸ்ரீநிதி இப்படி பேசி வருகிறார் என்று கருத்து கூறி வருகின்றனர். ஸ்ரீநிதியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.