Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் ஒன்னுமே செய்யல போலயே!
சென்னை: ஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் எதுவும் செய்யவில்லை என்று தெரிகிறது.
தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பினார் நடிகை ஸ்ரீ ரெட்டி. நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர். முருதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக ஸ்ரீ காந்த் பற்றி படுகேவலமாக பேட்டி கொடுத்தார்.
நடவடிக்கை
ஸ்ரீ ரெட்டி மீது தமிழ் பிரபலங்கள் புகார் அளிக்க உள்ளதாகவும் அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம் முயன்று வருவதாகவும் அவர் சென்னைக்கு வந்தபோதே செய்திகள் வெளியாகின. ஸ்ரீ ரெட்டி சென்னையை விட்டு கிளம்புவதற்குள் அவர் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்த்தால் ஒன்றும் நடக்கவில்லை.
கோலிவுட்
தெலுங்கு திரையுலகினர் ஒதுக்கி வரும் நிலையில் கோலிவுட்டில் செட்டிலாக திட்டமிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. தமிழ் பட வாய்ப்புகள் வந்து குவிவதாக வேறு பேட்டி கொடுத்துள்ளார். விரைவில் தான் தமிழ் படத்தில் ஒப்பந்தமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களில் நடித்துக் கொண்டு சென்னையில் வசிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்பு
ஸ்ரீ ரெட்டிக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிகிறது என்றால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது புகார் தெரிவித்த வேகத்தில் ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது கோலிவுட்டில் என்ன தான் நடக்கிறது என்று வியக்க வைத்துள்ளது.
விஜய்
அஜித் பிடிக்கும், விஜய் அழகு, சூர்யா, சிம்பு ரொம்ப நல்லவர்கள் என்று கூறி ஏற்கனவே ஐஸ் பாரை வைத்துவிட்டார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ ரெட்டிக்கு நடிகை ஆண்ட்ரியாவும் ஆதரவு அளித்துள்ளார். ஸ்ரீ ரெட்டி சொல்வது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீ ரெட்டியை திட்டினாலும் நீங்கள் ரொம்ப அழகு, என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று தமிழ் ரசிகர்கள் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ்
மீடியா முன்பு ஆடிஷன் நடத்தி அதில் ஸ்ரீ ரெட்டி சிறப்பாக நடித்தால் பட வாய்ப்பு அளிப்பதாக ராகவா லாரன்ஸ் சவால் விட்டார். ஸ்ரீ ரெட்டி அவர் சவாலை ஏற்காமல் ஃபேஸ்புக்கில் மட்டும் டப்ஸ்மாஷ் வீடியோ வெளியிட்டு இது ராகவலா லாரன்ஸ் மாஸ்டருக்கு என்று தலைப்பிட்டிருந்தார். லாரன்ஸ் சவாலை ஏற்காமலேயே ஸ்ரீ ரெட்டிக்கு தமிழ் பட வாய்ப்புகள் வருகிறதாமே.