Don't Miss!
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பத்மஸ்ரீ விருது எனக்கு கிடைத்த கௌரவம்: ஸ்ரீதேவி பெருமிதம்
மும்பையில் செட்டிலான தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பத்ஸ்ரீ விருது எனக்கு கிடைத்த கௌரவம். எனக்கு அன்பும், ஆதரவும் அளித்து வரும் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கடந்த 1967ம் ஆண்டு கந்தன் கருணை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் மூலம் பிரபலமான அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் குழந்தை நட்சத்திரமாக சென்ற பாலிவுட்டில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார்.
பின்னர் பாலிவுட் இயக்குனர் போனி கபூரை மணந்து ஜான்வி, குஷி ஆகிய 2 குழந்தைகளுக்கு தாயானார். திருமணம், குழந்தை என்ற ஆன பிறகு பெரிய திரையைவிட்டு ஒதுங்கி இருந்த அவர் 15 ஆண்டுகள் கழித்து இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படத்தின் மூலம் அண்மையில் தான் ரீ என்ட்ரி ஆனார். இந்நிலையில் தான் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.