Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஸ்ரீதேவி பயந்தது போன்றே நடந்துவிட்டது: கணவர் போனி கபூர்
Recommended Video
மும்பை: ஜான்வி நடிக்க வந்தால் இது தான் நடக்கும் என்று சொல்லி ஸ்ரீதேவி மிகவும் கவலைப்பட்டதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவிக்கு தனது மூத்த மகள் ஜான்வி கபூரை டாக்டராக்கி பார்க்க ஆசை. ஆனால் ஜான்வியோ அம்மா வழியில் நடிகையாகிவிட்டார். அவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான முதல் படமான தடக் ரூ. 50 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ஜான்வியை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது ஜான்விக்கு முதல் படம் என்பதை மறந்து ஸ்ரீதேவி அளவுக்கு இல்லை என்கிறார்கள்.
தன்னை தன் தாயுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று ஜான்வி கபூர் கேட்டுக் கொண்டும் பலனில்லை. இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் கூறியதாவது,
ஜான்வியை ஸ்ரீயுடன் ஒப்பிடுகிறார்கள். இது நடக்கும் என்று எங்களுக்கும் தெரியும். ஸ்ரீக்கும் தெரியும், அதனால் தான் அவர் மிகவும் கவலைப்பட்டார். இது போன்று நடக்கும் என்று எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள ஜான்வியை தயார் செய்தார் என்றார்.