ஆந்திராவை நோக்கும் ஸ்ரீதேவிகா தமிழில் வாய்ப்பில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த மலையாளத்து சேச்சி ஸ்ரீதேவிகா பொட்டியைக் கட்டிக் கொண்டு ஆந்திராவில்குடியேற முடிவு செய்துவிட்டார்.கேளரத்தில் வந்த நாயகிகள் தான் இன்று தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்து வருகின்றனர். ஆசினில் ஆரம்பித்து கோபிகா, நயனதாராவரை இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக நடிப்பவர்களில் 90 சதவீதத்தினர் கேரளத்து பட்சிகள் தான்.அதிலும் இதில் திருச்சூர் குமரிகளின் ஆதிக்கம் ரொம்பவே அதிகம். அந்த ஊரைச் சேர்ந்த ஸ்ரீதேவிகா, ரேணுகா மேனன், மல்லிகா,இவர்களைத் தொடர்ந்து பாவ்யா ஆகியோர் கோலிவுட்டுக்குள் வந்திறங்கியுள்ளனர். கேரளத்துக்கு சுந்தரிகளே அதிகபட்சமான பட வாய்ப்புக்களைப் பிடித்து வந்தாலும், ஆனால் அதிலும் கூட சிலர் க்ளிக் ஆகாமல்போய்விட்டது என்னவோ உண்மை. சக்ஸஸ் படத்தில் நடித்த நந்தனா, ஆட்டோகிராப்பில் நடித்த மல்லிகா ஆகியோரின் ஊத்திக் கொண்டசேச்சிகள் வரிசையில் ஸ்ரீதேவிகாவும் ஒருவர்.மல்லிகாவாவது அக்கா, தங்கச்சி கேரக்டர்களைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார். நந்தனாவுக்கு இப்போது கையில் ஏபிசிபி மற்றும் சிலபடங்கள் உள்ளன. ஆனால் ராமகிரஷ்ணா படம் மூலம் தமினில் அறிமுகமான ஸ்ரீதேவிகாவின் நிலை தான் ரொம்ப மோசம்.அழகிருந்தும், கவர்ச்சி காட்ட ஆர்வம் இருந்தும் ஸ்ரீதேவிகாவால் ஏனோ தமிழில் வாய்ப்புக்களைப் பிடிக்க முடியவில்லை. இவர் நடித்தஅந்த நாள் ஞாபமும் முதல் படத்தைப் போலவே ஊத்திக் கொண்டது. இவர் நடித்து வரும் அன்பே வா என்ற படத்தின் சூட்டிங் நடந்துரொம்ப நாளாகிவிட்டது. வேறு வாய்ப்புக்களும் இல்லாததால் வீட்டில் சும்மாவே இருந்தவர், தனது உடல் திறனை எடுத்துக் காட்ட பல வகையான கிளு கிளுஆல்பங்களை தயாரித்துக் கொண்டே தானே ஒவ்வொரு தயாரிப்பாளரின் ஆபிசிலும் ஏறி இறங்கிப் பார்த்தார். இயக்குனர்களை சந்தித்துப்பார்தார். எந்த முயற்சிக்கும் பலனில்லை.இளம் ஹீரோக்களை சந்தித்து வாய்ப்பு கேட்க இவர் எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.இதையடுத்து ஓல்டுகளுக்கு வலை வீசிப் பாத்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் உள்ள மூத்த குடி நடிகர்களை சந்தித்து வாய்ப்புகேட்டார். அந்த முயற்சி தமிழில் வெல்லவில்லை. ஆனால், தெலுங்கு கை கொடுத்துவிட்டது. இது தாண்டா போலீஸ் புகழ் ஓவர் சவுண்டுராஜசேகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.தமிழில் இருந்து தெலுங்குக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டிய ராஜசேகர் இன்னும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களைத் தந்து கொண்டு தான்இருக்கிறார். விஜய்காந்த் மாதிரி இவருக்கும் படத்துக்கு 2,3 ஹீரோயின்கள் இருப்பார்கள்.அந்த வகையில் ராஜசேகரின் ராஜா பாபு என்ற படத்தில் ஸ்ரீதேவிகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒரு மலையாள படத்தின்ரீ-மேக்காம். இந்தப் படத்தைத் தொடர்ந்து அப்படியே தெலுங்கில் ஒரு ரவுண்டு வரும் மூடில் இருக்கும் இப்போதைக்கு ஸ்ரீதேவிகா சென்னையை விட்டுகிளம்பிவிட முடிவு செய்துவிட்டாராம்.

By Staff

தமிழில் வாய்ப்பில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த மலையாளத்து சேச்சி ஸ்ரீதேவிகா பொட்டியைக் கட்டிக் கொண்டு ஆந்திராவில்குடியேற முடிவு செய்துவிட்டார்.

கேளரத்தில் வந்த நாயகிகள் தான் இன்று தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்து வருகின்றனர். ஆசினில் ஆரம்பித்து கோபிகா, நயனதாராவரை இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக நடிப்பவர்களில் 90 சதவீதத்தினர் கேரளத்து பட்சிகள் தான்.

அதிலும் இதில் திருச்சூர் குமரிகளின் ஆதிக்கம் ரொம்பவே அதிகம். அந்த ஊரைச் சேர்ந்த ஸ்ரீதேவிகா, ரேணுகா மேனன், மல்லிகா,இவர்களைத் தொடர்ந்து பாவ்யா ஆகியோர் கோலிவுட்டுக்குள் வந்திறங்கியுள்ளனர்.


கேரளத்துக்கு சுந்தரிகளே அதிகபட்சமான பட வாய்ப்புக்களைப் பிடித்து வந்தாலும், ஆனால் அதிலும் கூட சிலர் க்ளிக் ஆகாமல்போய்விட்டது என்னவோ உண்மை. சக்ஸஸ் படத்தில் நடித்த நந்தனா, ஆட்டோகிராப்பில் நடித்த மல்லிகா ஆகியோரின் ஊத்திக் கொண்டசேச்சிகள் வரிசையில் ஸ்ரீதேவிகாவும் ஒருவர்.

மல்லிகாவாவது அக்கா, தங்கச்சி கேரக்டர்களைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார். நந்தனாவுக்கு இப்போது கையில் ஏபிசிபி மற்றும் சிலபடங்கள் உள்ளன. ஆனால் ராமகிரஷ்ணா படம் மூலம் தமினில் அறிமுகமான ஸ்ரீதேவிகாவின் நிலை தான் ரொம்ப மோசம்.

அழகிருந்தும், கவர்ச்சி காட்ட ஆர்வம் இருந்தும் ஸ்ரீதேவிகாவால் ஏனோ தமிழில் வாய்ப்புக்களைப் பிடிக்க முடியவில்லை. இவர் நடித்தஅந்த நாள் ஞாபமும் முதல் படத்தைப் போலவே ஊத்திக் கொண்டது. இவர் நடித்து வரும் அன்பே வா என்ற படத்தின் சூட்டிங் நடந்துரொம்ப நாளாகிவிட்டது.


வேறு வாய்ப்புக்களும் இல்லாததால் வீட்டில் சும்மாவே இருந்தவர், தனது உடல் திறனை எடுத்துக் காட்ட பல வகையான கிளு கிளுஆல்பங்களை தயாரித்துக் கொண்டே தானே ஒவ்வொரு தயாரிப்பாளரின் ஆபிசிலும் ஏறி இறங்கிப் பார்த்தார். இயக்குனர்களை சந்தித்துப்பார்தார். எந்த முயற்சிக்கும் பலனில்லை.

இளம் ஹீரோக்களை சந்தித்து வாய்ப்பு கேட்க இவர் எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து ஓல்டுகளுக்கு வலை வீசிப் பாத்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் உள்ள மூத்த குடி நடிகர்களை சந்தித்து வாய்ப்புகேட்டார்.


அந்த முயற்சி தமிழில் வெல்லவில்லை. ஆனால், தெலுங்கு கை கொடுத்துவிட்டது. இது தாண்டா போலீஸ் புகழ் ஓவர் சவுண்டுராஜசேகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழில் இருந்து தெலுங்குக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டிய ராஜசேகர் இன்னும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களைத் தந்து கொண்டு தான்இருக்கிறார். விஜய்காந்த் மாதிரி இவருக்கும் படத்துக்கு 2,3 ஹீரோயின்கள் இருப்பார்கள்.

அந்த வகையில் ராஜசேகரின் ராஜா பாபு என்ற படத்தில் ஸ்ரீதேவிகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒரு மலையாள படத்தின்ரீ-மேக்காம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அப்படியே தெலுங்கில் ஒரு ரவுண்டு வரும் மூடில் இருக்கும் இப்போதைக்கு ஸ்ரீதேவிகா சென்னையை விட்டுகிளம்பிவிட முடிவு செய்துவிட்டாராம்.

Read more about: sridevika aims at tollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X