Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என் வலியை கார்த்திக்கு உணர்த்துவேன்.. ஸ்ரீரெட்டி புதிய சவால்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் கார்த்திக்கு சவால் விட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தன்னுடயை வலி என்ன என்று நடிகர் கார்த்திக்கு உணர்த்துவேன் என நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மீது தடாலடியாக பாலியல் புகார்களை கொடுத்து வருகிறார்.
தமிழ் பிரபலங்களான ஏஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கடுமையாக குற்றம் சுமத்திய ஸ்ரீரெட்டி, சினிமாவில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக போராடப் போவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் சென்னை வந்த ஸ்ரீரெட்டியிடம் எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு... ஆதாரம் வேண்டுமென்றால் பிறப்புறுப்பில் தான் கேமரா பொருத்தவேண்டும் என காட்டமாக பதிலளித்தார்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டி ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றும், நிரூப்பிக்க முடிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்தார். மேலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கார்திக்கு பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, "நான் நடிகர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறேன். மதிப்பிற்குரிய நடிகர் கார்த்தியின் வார்த்தைகள் என்னை புண்படுத்துகின்றன. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புகிறேன், இல்லையென்றால் என்னுடைய வலி என்ன என்பதை உங்களுக்கு உணர்த்துவேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காத்தானே தவிற பயன்படாத அறிவுரைகள் கூற இல்லை என்று குறிப்பிட்டு, என்னுடைய கஷ்டத்தை நினைத்து பாருங்கள். லாஜிக் பேசாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.