Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆமாம் நான் ஆன்ட்டி தான் .. ரசிகர் கமெண்டுக்கு காரமாக பதிலளித்த "சுப்பிரமணியபுரம்" சுவாதி
ஹைதராபாத்: நடிகை விசாகா சிங்கைத் தொடர்ந்து, நடிகை சுவாதியும் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கமெண்டுக்கு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சுவாதி.
இரு தினங்களுக்கு முன்பு நடிகை சுவாதி புடவை கட்டி தான் எடுத்த செல்பி ஒன்றை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்ய, அதனைப் பார்த்த ஒரு ரசிகர் தயவு செய்து இதுபோன்ற புகைப்படங்களை போடாதீர்கள் பார்ப்பதற்கு ஆன்ட்டி போல இருக்கிறீர்கள் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
அவ்வளவு தான் உடைத்த சோடா போல சும்மா பொங்கி எழுந்து ஆமாம் நான் ஆன்ட்டி தான் என்றுமே கலர்ஸ் சுவாதியாக இருக்க முடியாது உங்கள் இலவச ஆலோசனைக்கு நன்றி அங்கிள் என்று கூறியவர் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.
நான் பார்த்து வளர்ந்த ஆன்ட்டிகள் எல்லோருமே சூப்பர் பெண்கள்தான் எனது எடை கூடியிருந்து நான் ஆன்ட்டியாக தெரிந்தால் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை, நீங்கள் சொன்ன கமெண்டை எனது இந்தப் படத்திற்கான பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் என்று அதற்கு ஒரு நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார்.
பாவம் அந்த ரசிகர் பயந்து போய் தனது அக்கவுண்டையே டெலீட் செய்துவிட, அவர் கூறியது ஒன்றும் ஆபாசமான கமென்ட் அல்ல அதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர் தெலுங்குலகத்தினர்.
என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா..........