Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எக்குத்தப்பாக கேள்வி கேட்ட கணவர்…ஒரே வருடத்தில் விவாகரத்து செய்த நடிகை !
சென்னை : எக்குத்தப்பா கேள்வி கேட்ட கணவரின் வார்த்தையால் மனம் நொந்த நடிகை, திருமணமான ஒரு வருடத்திலேயே அவரை விட்டு பிரிந்தார்.
திரைக்கு முன்னால் ரசிகர்களால் கொண்டாடப்படும் உச்சத்தில்
இருக்கும் பெரும்பாலான நடிகைகளில் வாழ்க்கை திரைக்குப் பின்னால் சோகம் நிறைந்ததாகவே
உள்ளது.
90களில் அனைவராலும் கொண்டாடப்பட்ட நடிகையை பற்றி இப்போது பார்க்கலாம்.
எல்லோரும் பார்க்குற மாதிரி படம் எடுங்க...பீஸ்ட்டை கிழித்து தொங்க விட்ட கஸ்தூரி
அறிமுகம்
90கால கட்டத்தில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் ஆர்த்திதேவி.
என்னது ஆர்த்திதேவியா, யாரு அது என்று குழம்ப வேண்டாம்.
அது வேறுயாரும் இல்லை நம்ம சுகன்யா
தான். சினிமாவுக்காக தனது பெயரை சுகன்யா என்று மாற்றிக்கொண்டார். புது நெல்லி புது
நாத்து படத்தில் அறிமுகமான இவருக்கு சுகன்யா என பெயர் வைத்ததே பாரதிராஜா தான்.
குவிந்த படவாய்ப்புகள்
முதல் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய்காந்துடன் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்தார்.
அந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு அனைவருக்கும் பிடித்துப்போனது. இதையடுத்து,
திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல்,
உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்
பெற்றார்.
திருமணம்
கமல் ,விஜய்காந்த், கார்த்திக், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட சுகன்யாவுக்கு படவாய்ப்புகள் குறைந்ததை அடுத்து
2002ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டுக்கூட நீடிக்கவில்லை. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
கசந்த மணவாழ்க்கை
திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், கணவருக்கோ சுகன்யா
நடிப்பது பிடிக்கவில்லையாம், இதனால், திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக்கூடாது என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல், எக்குத்தப்பான கேள்விகளையும் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுகன்யா அவரை விவாகரத்து செய்துள்ளார்.
தனிமையில்
திருமண வாழ்க்கை முறிந்த பிறகு, ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது 51 வயதாகும் சுகன்யா இன்னமும் தனிமையில் வசித்து வருகிறார். அந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் தனியாகவே இருந்து வருகிறார் சுகன்யா.