நைட் கிளப்பில் சன்னி லியோன் ஆட துபாய் சுற்றுலாத் துறை தடை
துபாய்: நடிகை சன்னி லியோன் துபாயில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடனமாட துபாய் சுற்றுலாத் துறை அனுமதி மறுத்துள்ளது.
வெளிநாட்டில் வசித்து வந்த சன்னி லியோன் 19 வயதில் இருந்து ஆபாச படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் இந்தியாவில் பிரபலமானார். இதையடுத்து ஜிஸ்ம் 2 படம் மூலம் பாலிவுட் நடிகையானார். அதன் பிறகு அவர் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
படங்கள் தவிர்த்து சன்னி விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியாவில் தங்கி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தப் போவதாக அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் நைட் கிளப்பில் நடனம்
துபாயில் உள்ள வைல்ட் என்ற இரவு நேர விடுதியில் சன்னி லியோனை நடனமாட வைக்க பிரீமியர் புரடக்ஷன் ஹவுஸ் சிஇஓ ஜாவித் ஷஃபி ஏற்பாடு செய்தார்.

சன்னிக்கு அனுமதி மறுப்பு
சன்னி துபாயில் இரவு விடுதியில் நடனமாட துபாய் வணிக மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறை அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து சன்னி நிகழச்சியைக் காண டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

ஏற்பாட்டாளர் வருத்தம்
துபாய் சுற்றுலாத் துறையின் முடிவை தான் மதிப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜாவித் ஷஃபி தெரிவித்தார். சுற்றுலாத் துறை அனுமதி இல்லாததால் இரவு விடுதியில் சன்னி நடனமாட முடியவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











