மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது எப்படி?: சன்னி லியோன் சொன்ன ரகசியம்
மும்பை: ஆண்கள் பெண்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பது தான் நல்ல உறவுக்கு அடையாளம். ஏனென்றால் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் சன்னி.
வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட் நடிகையாகிவிட்டார். இது பாலிவுட்டிலேயே பலருக்கு பிடிக்கவில்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது. இது எல்லாம் தெரிந்தும் நான் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தே தீருவேன் என்று அடம்பிடிக்கிறார் சன்னி.
இந்நிலையில் நடிகை ராக்கி சாவ்ந்த் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சன்னியை திட்டித் தீர்க்கிறார்.

ஓடிடு
சன்னி லியோன், மரியாதையாக இந்தியாவை விட்டும், பாலிவுட்டை விட்டும் ஓடிவிடு. வெளிநாட்டில் நீ என்ன செய்தாயோ அதை அங்கேயே செய், இங்கு வேண்டாம் என்று ராக்கி சாவ்ந்த் கொந்தளித்துள்ளார்.

ஆடை
ஆபாச படங்களில் நடித்த சன்னி இங்கு ஆடை அணிந்து நடிக்கத் தான் தயாரிப்பாளர்கள் அவருக்கு சம்பளம் தருகிறார்கள் என்று நக்கல் அடித்துள்ளார் ராக்கி.

செலினா ஜேட்லி
நடிகை செலினா ஜேட்லியோ சன்னி லியோன் தனது வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் இருந்த நாற்காலி, மேஜை, சோபாக்களை எல்லாம் சேதப்படுத்தி விட்டார் என்று புகார் தெரிவித்தார்.

சன்னி
ராக்கியும், செலினாவும் என்னைப் பற்றி தெரிவித்தது எல்லாம் ஒன்றுக்கும் உதவாதது. அவை அனைத்தும் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு. இது நடிகைகளுக்கு அழகல்ல. இது அவர்கள் பிரச்சனை. எனக்கு என்ன வந்தது. நான் இங்கு நடிக்க வந்துள்ளேன். அதில் மட்டும் கவனம் செலுத்துவேன் என்கிறார் சன்னி.

எம்.டி.வி.
எம்.டி.வியில் ஸ்பிலிட்ஸ்வில்லா நிகழ்ச்சியின் அடுத்த சீசனை சன்னி நடத்த உள்ளார். ஆண்கள் பெண்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பது தான் நல்ல உறவுக்கு அடையாளம். ஏனென்றால் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனைவி கூறுவதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார் சன்னி.


Click it and Unblock the Notifications











