twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடுங்கும் குளிர்.. நள்ளிரவு ஏரி... காதலனுடன் நெளிந்த 'கவர்ச்சிப் பாம்பு' சன்னி லியோன்!

    |

    மும்பை: ராகினி எம்எம்எஸ்-2 படத்தின் கவர்ச்சிகரமான காட்சியின் படப்பிடிப்புக்காக போன இடத்தில் திகிலூட்டும் அனுபவத்தை சந்தித்துத் திரும்பியுள்ளார் நடிகை சன்னி லியோன்.

    போனதென்னவோ கவர்ச்சிகரமான காதல் காட்சிக்காகத்தானாம். நள்ளிரவில், சில்லிடும் ஏரி நீரில் சன்னி லியோனும், அவரது காதலனாக வரும் ஹீரோவும் குளிப்பது போலவும், காதலில் ஈடுபடுவது போலவும் படமாக்கப் போனார்கள்.

    ஆனால் அந்த ஏரியில் பாம்புகள் இருக்கும் என்று பலர் அச்சுறுத்தியதால் பயந்து நடுங்கியபடியே நடித்து முடித்தாராம் சன்னி லியோன்.

    இது கனடாவின் கவர்ச்சி கிளி:

    இது கனடாவின் கவர்ச்சி கிளி:

    கனடாவைச் சேர்ந்த நடிகையான சன்னி லியோன் இப்போது இந்தித் திரையிலகில் நடித்துக் கொண்டிருக்கிறார்.ராகினி எம்எம்எஸ் படத்தில் நடித்த அவர் தற்போது அதன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார்.

    கவர்ச்சி காதல் காட்சி:

    கவர்ச்சி காதல் காட்சி:

    இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு கவர்ச்சிகரமான காதல் காட்சியை மும்பைக்கு அருகில் உள்ள வாசி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு ஆளரவமற்ற ஏரியில் படமாக்க முடிவு செய்து அங்கு போனார்களாம்.

    ”ஜிலு ஜிலு” நடுராத்திரி ஏரி:

    ”ஜிலு ஜிலு” நடுராத்திரி ஏரி:

    நடு ராத்திரியில்தான் படமாக்க வேண்டும் என்பது டைரக்டரின் விருப்பம். அப்போதுதான் ஏரித் தண்ணீர் நன்கு குளிர்ச்சி அடைந்திருக்கும். அப்போதுதான் எதிர்பார்த்த எபக்ட் கிடைக்கும் என்பது அவரது கருத்து.

    தண்ணீர் பாம்பு புரளி:

    தண்ணீர் பாம்பு புரளி:

    ஏரிக்குள் சன்னியும் இறங்கி விட்டார். காதலனாக நடித்த ஹீரோவும் கூடவே இறங்கினார். ஆனால் ஏரிக்குள் தண்ணீர் பாம்புகள் இருக்கும் என்று சிலர் எச்சரித்ததால் சன்னி பயந்து போய் விட்டாராம்.

    பாம்பால் பயமான கவர்ச்சி கன்னி:

    பாம்பால் பயமான கவர்ச்சி கன்னி:

    அந்தக் காட்சியானது, காதலனை சன்னி தனது கவர்ச்சியால் மயக்குவது போல காட்சியாம். ஆனால் பாம்பு பயத்தால் கவர்ச்சியாவது, மயக்கமாவது என்று சன்னி டென்ஷனாகி விட்டாராம். இருந்தாலும் ஒரு வழியாக நடித்து முடித்துக் கொடுத்தாராம்.

    அலர்ஜி ஏரி:

    அலர்ஜி ஏரி:

    ஆனால் ஏரியிலிருந்து வெளியே வந்த அடுத்த நாளே அவரது மென்மையான சருமத்திற்கு அலர்ஜி வந்து படுத்தி எடுத்து விட்டதாம். உடம்புக்கும் முடியாமல் போய் விட்டதாம்.

    அய்யோடா நரகம்!:

    அய்யோடா நரகம்!:

    இந்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், நான் ஏரியில் இறங்கியபோது செத்துப் போன ஒரு பாம்பைப் பார்த்தேன். எனக்கு பயமே வந்து விட்டது. தண்ணீரும் அசுத்தமாக இருந்தது. நரகம் போல உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    Ragini MMS - 2, the forthcoming horror-erotica film, contains a horror-packed scene shot inside a lake. In fact, there is even a fleeting shot of the said scene in the film's trailer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X