கற்பழிப்பை 'சர்பிரைஸ் செக்ஸ்' என்று சொன்னாரா சன்னி?
மும்பை: பாலியல் பலாத்காரம் குறித்து இந்தியாவில் சூடான விவாதங்கள் நடந்து வரும் நிலையில் சர்ச்சைக்கிடமான கருத்தைத் தெரிவித்து வம்பில் சிக்கியுள்ளார் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன்.
கனடாவைச் சேர்ந்தவர் இந்திய வம்சவாளியைச் சேர்ந்த சன்னி லியோன். இவர் அங்கு ஆபாசப் படங்களில் நடித்துப் பிரபலமானர், நிர்வாணமெல்லாம் இவருக்கு வெகு சாதாரணம். தற்போது இந்தி சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாலியல் பலாத்காரம் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்தைத் தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டதாக வம்பில் மாட்டியுள்ளார். ஆனால் அப்படி தான் எதையும் சொல்லவில்லை என்று மறுத்துள்ளார் சன்னி.

என்ன சொன்னார் சன்னி?
கற்பழிப்பு என்பது பெரிய குற்றச் செயல் அல்ல. உண்மையில் அது திடீரென கிடைக்கும் செக்ஸ் என்பதுதான் சரியான வார்த்தையாகும் என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டார் சன்னி என்பதுதான் சர்ச்சை.

உடனே டெலிட் செய்து விட்டார்
ஆனால் இந்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்ப ஆரம்பித்ததைத் தொடர்ந்து உடனடியாக அந்தக் கருத்தை அவர் நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

காட்டுத்தீயாக பரவி பரபரப்பு
ஆனால் இதை சன்னி நீக்குவதற்குள்ளாகவே அது பலமுறை பலரால் ரீட்வீட் செய்யப்பட்டு விட்டதால் சர்ச்சை பெரிதாகியுள்ளது.

நான் சொல்லவே இல்லை
இந்த நிலையி்ல தற்போது இதை மறுத்து ஒரு மெசேஜ் விட்டுள்ளார் சன்னி. அதில், பாலியல் பலாத்காரம் குறித்து யார் இப்படிப்பட்ட கருத்தைச் சொல்லியிருந்தாலும் அவர் முட்டாள். நான் இப்படிச் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார் சன்னி.

பிளாக் செய்கிறேன்
தற்போது பலாத்காரம் குறித்த தனது கருத்தை ரீட்வீட் செய்த அனைவரையும் பிளாக் செய்து வருகிறாராம் சன்னி லியோன். இதுகுறித்து அவர் கூறுகையில் என் கையில் ஐபேட் இருக்கு. எனவே உடனுக்குடன் எனக்குப் பிடிக்காத கமெண்ட்டுகளைப் போடுபவர்களை ரீட்வீட் செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுவேன் என்று கூறுகிறார் சன்னி.

இப்ப என்ன செய்கிறார் சன்னி...?
சன்னி லியோன் இப்போது ராகினி எம்எம்எஸ்2 படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குகிறார் ஏக்தா கபூர்...


Click it and Unblock the Notifications











