Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்பாட் ஃபிக்சிங்சில் சிக்கிய ஸ்ரீசாந்த்… உடன் சுற்றிய நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
மும்பை: ஐ.பி.எல் ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு சிறை சென்றதற்கு பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சியடைந்துள்ளார்.
வசந்த் இயக்கத்தில் வெளியான மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்தவர் சுர்வீன் சாவ்லா. இவர் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உடன் இணைந்து நடனமாடியுள்ளார். இதனால் இருவருக்கும் காதல் அரும்பியதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் ஐ.பி.எல் சூதாட்டப் புகாரில் சிக்கை கைதானார் ஸ்ரீசாந்த்.
நடிகை அதிர்ச்சி
இந்த சம்பவம் பற்றி செய்தியாளர்கள் சுர்வீன் சாவ்லாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் கைதான தகவல் வந்தபோது நான் கேன்ஸ் படவிழாவில் இருந்தேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் எனக்கு அதிர்ச்சி அளித்தன.
இப்போ தொடர்பு இல்லை
ஸ்ரீசாந்தும் நானும் நண்பர்களாக இருந்தோம். ஆனால் சமீபகாலமாக அவருடன் நான் தொடர்பில் இல்லை.
எனக்கு வருத்தமளிக்கிறது
ஸ்ரீசாந்த் கேரள மக்களை கிரிக்கெட்டுக்கு கொண்டுவர ஒரு உந்துதலாக இருந்தார். பணத்தாசை மனிதர்களை எப்படியெல்லாமோ குப்புற தள்ளிவிடுகிறது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார் சுர்வீன் சாவ்லா.