Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- News கர்நாடகா: ஏப்.26-ல் முதல் கட்ட தேர்தல்- களத்தில் 247 வேட்பாளர்கள்! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காமக் கொடூரன்கள் இதைப் பார்த்தாவது திருந்தட்டும்... ஸ்வேதா மேனனின் பரபரப்பு 'மெசேஜ்'!
சென்னை: சமீபத்தில் 73 வயது காங்கிரஸ் எம்.பி. தன்னை பாலியல் ரீதியாக சீண்டினார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்வேதா மேனனின் தத்ரூப பிரசவக் காட்சி இடம் பெற்ற களிமண்ணு படம் தமிழில் உயிரின் ஓசை என்ற பெயரில் டப்பிங் ஆகி வருகிறது.
காமக் கொடூரன்கள் இந்த பிரசவக் காட்சியைப் பார்த்தாவது திருந்தட்டும் என்று அந்தக் காட்சி நிஜமாக படமாக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்புகளுக்குப் பதிலளித்திருந்தார் ஸ்வேதா என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடும் நடிகை வேடத்தில் ஸ்வேதா மேனன் கவர்ச்சி பொங்க நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
பிரதாப் சந்திரன் மகன் அனுப் பிரசாத்
மலையாளம், தமிழ் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பிரதாப் சந்திரன். அவரது மகன் அனூப் பிரசாத். தனது தந்தையை கௌரவிக்கும் பொருட்டு பிரதாப் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி "உயிரின் ஓசை" என்ற படத்தை தயாரிக்கிறார்.
மலையாளத்து களிமண்ணு
மலையாளத்தில் களிமண்ணு என்ற பெயரில் தயாரான படமே "உயிரின் ஓசை" என்ற பெயரில் உருவாகிறது.
ஸ்வேதா மேனன் நாயகி
இப்படத்தில் ஸ்வேதா மேனன் நாயகியாக நடித்துள்ளார். கூடவே பிஜூ மேனன், சுஹாசினி, லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் பிரியதர்சன் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். சுனில்ரெட்டி, அனுபம்கேர் ஆகியோரும் நடிதிருக்கிறார்கள்.
குத்துப்பாட்டுக்கு ஆடும் நாயகி
ஒரு பாடலுக்கு ஆடும் நடிகையாக இருக்கும் ஸ்வேதா மேனன் பல போராட்டத்திற்கு பிறகு ஒரு படத்தில் கதாநாயகி ஆகிறார். அந்த படத்தின் சிறப்பு காட்சியை காண வரும் அவரது கணவர் விபத்தில் சிக்கி மூளைச் சாவு நிலமைக்கு ஆளாகிறார்.
வாரிசு இல்லையே.. கலங்கிய ஸ்வேதா
இனி பிஜூமேனன் உயிர் பிழைக்க முடியாது என்கிற நிலைமையில் உடல் உறுப்புகளை தானமாக கொடு என்று நடபு வட்டாரங்கள் கேட்கிறார்கள். எனக்குன்னு ஒரு வாரிசு கூட இல்லையே என்று அவர் கலங்குவதை கண்டு பிஜூ மேனனின் உடலிலிருந்து உயிரணுவை எடுத்து ஸ்வேதா மேனனின் கருவறைக்குள் வைத்து அவளைத் தாயாக்குகிறார்கள். அந்த பிரசவத்தை முழுவதுமாக படமாக்கி மக்களுக்கு காட்டுங்கள் என்கிறார்.
தத்ரூப பிரசவக் காட்சி
ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவத்தை இதற்காக படமாக்கினார்கள். அதற்காக பலத்த எதிர்ப்பும் கிளம்பியது.
காமக் கொடூரன்கள் திருந்தட்டுமே
ஒரு பெண் தாயாவது எவ்வளவு வேதனையானது என்பதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காம கொடூரன்கள் இதை பார்த்தாவது திருந்த வேண்டும் என்று கூறி ஸ்வேதாமேனன் அந்த எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
ஸ்வேதாவின் இந்த தத்ரூப பிரசவக் காட்சி படமாக்கப்பட்டபோது அது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை பிளஸ்ஸி இயக்கியுள்ளார்.