Don't Miss!
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
யானை வெளியே வந்துவிட்டது.. வால் மட்டும் மிச்சம் இருக்கு.. நடிகை டாப்ஸியின் இன்ஸ்டா பதிவு!
சென்னை: உத்தரகாண்டில் நடைபெற்று வந்த ப்ளர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை டாப்ஸி.
Money Heist Season 5… செப்டம்பர் 3 முதல் நெட்ஃப்ளிக்ஸில்… ஹேஷ்டேகுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள் !
அதனை தொடர்ந்து தமிழில் வெளியான ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.
பாலிவுட்டில் என்ட்ரி
தமிழில் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் என்ற த்ரில்லர் படம் வெளியானது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருந்த டாப்ஸி, சாஷ்டே பதூர் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
பாலிவுட்டில் டாப் நடிகை
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார். மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார் டாப்ஸி. கடைசியாக பாலிவுட்டில் ஹசீன் தில்ரூபா என்ற படத்தில் நடித்திருந்தார் டாப்ஸி.
சிவகார்த்திகேயனுடன் ஏலியன்
தற்போது விஜய் சேதுபதியுடன் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்துள்ளார் டாப்ஸி. இந்தப் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து ஜன கன மன மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஏலியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி.
தயாரிப்பாளரான டாப்ஸி
அதேநேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி படத்திலும் படு பிஸியாக உள்ளார். இதனிடையே ப்ளர் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி. இந்தப் படத்தில் லீடிங் கதாபாத்திரத்தில் நடிப்பதை தாண்டியும் டாப்ஸி தனது தயாரிப்பு நிறுவனமான அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
முதல் புராஜெக்ட்டாக ப்ளர்
நடிகை டாப்ஸி ஜூலை 15ஆம் தேதி தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தயாரிப்பாளராக தனது முதல் புராஜெக்ட் என ப்ளர் படத்தை அறிவித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு உத்தரகாண்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் உத்தரகாண்டில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை டாப்ஸி அறிவித்துள்ளார்.
வால் மட்டும் உள்ளது
படக் குழுவுடன் எடுத்துள்ள போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள டாப்ஸி, முழு யானையும் வெளியேறியது, வால் மட்டும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உத்தரகாண்டிலேயே படத்தின் பெரும்பாலான காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Recommended Video
ஜூலையில் ஃபர்ஸ்ட் லுக்
கடந்த ஜூலை மாதம் ப்ளர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார் டாப்ஸி. அவரது கண்களில் இருந்த கையை பின்னால் பிளாக் ட்ராப்பில் இருந்து மற்ற இரண்டு கைகள் பற்றுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ப்ளர் படத்தை அஜய் பால் இயக்குகிறார்.