Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வருவாரா தபு?
மலையாளத்தில் ஹிட் ஆன கத பறயும்போல் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை பி.வாசு இயக்கவுள்ளார்.
இப்படத்தில் இரண்டு ஹீரோக்கள். ரஜினி, நடிகராக இப்படத்தில் நடிக்கிறார். 2வது நாயகனாக பசுபதி நடிக்கவுள்ளார். அதேபோல தெலுங்குப் பதில் 2வது நாயகனாக ஜெகபதி பாபு நடிப்பார் எனத் தெரிகிறது.
கிராமத்து சவரத் தொழிலாளி வேடத்தில் பசுபதியும், ஜெகபதி பாபுவும் நடிக்கவுள்ளனர்.
சமீபத்தில் ரஜினியை ஜெகபதிபாபு சந்தித்து இதுதொடர்பாக பேசினாராம். அப்போதுதான் ஜெகபதி பாபு நடிப்பது குறித்து உறுதியானதாம்.
இதற்கிடையே, தமிழில் பசுபதிக்கு ஜோடியாக முதலில் சிம்ரனைப் போட வாசு தீர்மானித்திருந்தாராம். ஆனால் சிம்ரன் டிவி சீரியலில் நடிக்கக் கிளம்பி விட்டதாலும், கூடுதல் சம்பளம் கேட்டதாலும் அவரை நிராகரித்து விட்டார்களாம். அவருக்குப் பதில் தற்போது தபுவை அணுகியுள்ளனராம்.
தபு தமிழில் இதுவரை காதல் தேசம் மற்றும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார். மூன்றாவது முறையாக, பசுபதிக்கு ஜோடியாக நடிக்க அவர் முன்வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.