‘மொழிபேதம் இல்லாத நடிகை நான்’... ஆந்திரா போராட்டக்காரர்களிடம் கெஞ்சிய தமன்னா
விசாகப்பட்டணம்: ஷூட்டிங் முடிந்து விசாகப்பட்டிணத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த நடிகை தமன்னா ஆந்திரா போராட்டக்காரர்களிடம் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டார்.
அவரை ஆந்திராவுக்கு ஆதரவாக கோஷம் போடச் சொல்லி போராட்டக்காரர்கள் வற்புறுத்தியுள்ளனர். 'ஐக்கிய ஆந்திராவுக்கு ஜே' எனச் சொல்லச் சொல்லி தமன்னாவை மிரட்டியுள்ளனர். ஆனால், காருக்குள் இருந்தபடியே தமன்னா வெளியே வராமலேயே, அதனை மறுத்துள்ளார்.
இதனால் தமன்னாவை அங்கிருந்து நகர விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர். பின்னர் அவர்களிடம் தமன்னா தனது நிலைமை எடுத்துக் கூறி சமாதானம் செய்தார். அபோது அவர் கூறியதாவது...

நான் நடிகைங்க...
ப்ளீஸ், என்னைப் பேச விடுங்கள். நான் ஒரு நடிகை. எனக்கு மொழிபேதம் இல்லை.

நடிப்பு என் தொழில்...
அனைத்து மொழிகளிலும் நடிப்பது தான் எனது தொழில். ஆந்திராவோ. தெலுங்கானாவோ, தமிழ்நாடோ எனக்கு எல்லாமே ஒன்று தான்.

ரொம்ப அவசரம்...
என்னைப் போக விடுங்கள். நான் அவசரமாக செல்ல வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

தப்பித்தால் போதும்...
சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்தப் பிரச்சினை பிறகு ஒரு வழியாக சமரசம் ஆனது. அதன் பின்னர் அங்கிருந்து விட்டால் போதும் ரேஞ்சில் ஏர்போர்ட் நோக்கி விரைந்தார் தமன்னா.


Click it and Unblock the Notifications











