Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
‘மொழிபேதம் இல்லாத நடிகை நான்’... ஆந்திரா போராட்டக்காரர்களிடம் கெஞ்சிய தமன்னா
விசாகப்பட்டணம்: ஷூட்டிங் முடிந்து விசாகப்பட்டிணத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த நடிகை தமன்னா ஆந்திரா போராட்டக்காரர்களிடம் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டார்.
அவரை ஆந்திராவுக்கு ஆதரவாக கோஷம் போடச் சொல்லி போராட்டக்காரர்கள் வற்புறுத்தியுள்ளனர். 'ஐக்கிய ஆந்திராவுக்கு ஜே' எனச் சொல்லச் சொல்லி தமன்னாவை மிரட்டியுள்ளனர். ஆனால், காருக்குள் இருந்தபடியே தமன்னா வெளியே வராமலேயே, அதனை மறுத்துள்ளார்.
இதனால் தமன்னாவை அங்கிருந்து நகர விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர். பின்னர் அவர்களிடம் தமன்னா தனது நிலைமை எடுத்துக் கூறி சமாதானம் செய்தார். அபோது அவர் கூறியதாவது...
நான் நடிகைங்க...
ப்ளீஸ், என்னைப் பேச விடுங்கள். நான் ஒரு நடிகை. எனக்கு மொழிபேதம் இல்லை.
நடிப்பு என் தொழில்...
அனைத்து மொழிகளிலும் நடிப்பது தான் எனது தொழில். ஆந்திராவோ. தெலுங்கானாவோ, தமிழ்நாடோ எனக்கு எல்லாமே ஒன்று தான்.
ரொம்ப அவசரம்...
என்னைப் போக விடுங்கள். நான் அவசரமாக செல்ல வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
தப்பித்தால் போதும்...
சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்தப் பிரச்சினை பிறகு ஒரு வழியாக சமரசம் ஆனது. அதன் பின்னர் அங்கிருந்து விட்டால் போதும் ரேஞ்சில் ஏர்போர்ட் நோக்கி விரைந்தார் தமன்னா.