Just In
- 1 hr ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 2 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 3 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 4 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'நிம்மதி வேணும்...'- திருப்பதியில் தமன்னா வேண்டுதல்
சமீபத்தில் திருமலைக்கு தமன்னா வருவது இது இரண்டாவது முறையாகும்.
தமிழில் ஓஹோவென்றிருந்த தமன்னா, சிறுத்தை, வேங்கை படங்களுக்குப் பிறகு தமிழில் வாய்ப்பே இல்லாமல், தெலுங்குக்குப் போனார்.
இரு மாதங்களுக்கு முன்பு, ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் இடைவேளையில் திருமலைக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் கவர்ச்சியாக உடையணிந்து வந்து சாமி கும்பிட்டதாகக் கூறி சர்ச்சை கிளம்பியது. பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், திடீரென நேற்று திருமலைக்குச் சென்று சாமி கும்பிட்டார் தமன்னா. ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு வந்த அவர், பின்னர் இங்கிருந்து திருமலைக்கு தன் தாயாருடன் காரில் சென்றார். அதிகாலை சுப்ரபாதம் தரிசனத்துக்குச் சென்ற அவர் அடக்க ஒடுக்கமாக சுடிதார் அணிந்திருந்தார்.
தரிசனம் முடிந்த பிறகு அவர் கூறுகையில், "எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நான் திருமலைக்குச் சென்றுவிடுவேன். இந்த முறை மன அமைதியும் நிம்மதியும் தன்னம்பிக்கையும் வேண்டி அங்கே சென்றிருந்தேன்," என்றார்.
திருமலையில் தரிசனம் முடிந்ததும் மீண்டும் சென்னை திரும்பிய தமன்னா, பின்னர் கொச்சியில் ராம் சரண் தேஜாவுடன் டூயட் பாட கிளம்பிவிட்டார்.