Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'நிம்மதி வேணும்...'- திருப்பதியில் தமன்னா வேண்டுதல்
சமீபத்தில் திருமலைக்கு தமன்னா வருவது இது இரண்டாவது முறையாகும்.
தமிழில் ஓஹோவென்றிருந்த தமன்னா, சிறுத்தை, வேங்கை படங்களுக்குப் பிறகு தமிழில் வாய்ப்பே இல்லாமல், தெலுங்குக்குப் போனார்.
இரு மாதங்களுக்கு முன்பு, ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் இடைவேளையில் திருமலைக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் கவர்ச்சியாக உடையணிந்து வந்து சாமி கும்பிட்டதாகக் கூறி சர்ச்சை கிளம்பியது. பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், திடீரென நேற்று திருமலைக்குச் சென்று சாமி கும்பிட்டார் தமன்னா. ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு வந்த அவர், பின்னர் இங்கிருந்து திருமலைக்கு தன் தாயாருடன் காரில் சென்றார். அதிகாலை சுப்ரபாதம் தரிசனத்துக்குச் சென்ற அவர் அடக்க ஒடுக்கமாக சுடிதார் அணிந்திருந்தார்.
தரிசனம் முடிந்த பிறகு அவர் கூறுகையில், "எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நான் திருமலைக்குச் சென்றுவிடுவேன். இந்த முறை மன அமைதியும் நிம்மதியும் தன்னம்பிக்கையும் வேண்டி அங்கே சென்றிருந்தேன்," என்றார்.
திருமலையில் தரிசனம் முடிந்ததும் மீண்டும் சென்னை திரும்பிய தமன்னா, பின்னர் கொச்சியில் ராம் சரண் தேஜாவுடன் டூயட் பாட கிளம்பிவிட்டார்.