ஊத்திக் கொண்ட “ஹம்சகல்ஸ்” – உருண்டு, உருண்டு அழும் தமன்னா!
சென்னை: ஹிம்மத்வாலாவிற்கு பிறகு தமன்னா ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திப்படமான ஹம்சகல்ஸ் வெளியான அன்றே படுதோல்வி அடைந்ததால் கதறிக் கதறி அழுது கொண்டிருக்கின்றாராம் அவர்.
அடுத்தடுத்து இரண்டு இந்திப் படங்களும் ஊத்திக் கொண்டதால் தமன்னாவுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளதாம்.
இந்தியில் தமன்னா படுகவர்ச்சியாக நடித்திருந்த ஹிம்மத்வாலா படம் படுதோல்வியை சந்தித்திருந்தது.

ஹம்சகல்ஸ்:
இந்நிலையில்தான் மீண்டும் அவரின் எதிர்ப்பார்ப்புப் படமான ஹம்சகல்ஸ் நேற்று வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் தரப்பில் இருந்து பெற்றுள்ளது.

அரை நட்சத்திரம் மட்டுமே:
மேலும், விமர்சனங்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தை வழங்கி வெளியிடும் வட இந்திய பத்திரிக்கைகள் இந்தப் படத்திற்கு வெறும் அரை நட்சத்திரம் மட்டுமே வழங்கி உள்ளன.

கால் மணி நேரம் கூட பார்க்க முடியாது:
முதல் 15 நிமிடம் கூட இப்படத்தைப் பார்க்க முடியவில்லையாம்.

எண்ணத்தில் மண்:
இந்தப்படத்தின் மூலம் இந்தியில் ஏதேனும் ஒரு இடத்தைப் பிடித்துவிடலாம் என்று நினைத்த தமன்னாவின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது.

வேற படம் வேற இல்லையே:
மேலும், மகேஷ்பாபுவுடன் நடித்துள்ள "ஆகாடு" தவிர தெலுங்கிலும் வேறு படங்கள் இல்லை. தமிழில் சுத்தமாகவே எந்தப் படமும் கையில் இல்லை.

யாராச்சும் போய் ஆறுதல் சொல்லுங்களேன்:
இதனால் ஹோட்டலில் ரூம் போட்டு அழுது தீர்க்கின்றாராம் தமன்னா. ஆறுதல் சொல்வதுதான் யாரென்று தெரியவில்லை.
யாராச்சும் போய் சொல்லிட்டு வர்றீங்களாப்பா... பாவம்!


Click it and Unblock the Notifications











