Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனுஜாவை மிரட்டிய தயாரிப்பாளர் சிறையில் அடைப்பு நடிகை தனுஜாவை 2வது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர்பியாரிலால் குந்தாஷா 15 நாள் சிறைக் காவலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு படங்களுக்குப் பூஜை போட்டு அவற்றில் பெரும்பாலானவற்றை எடுத்து முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவரும் "பிரபல இயக்குனர், நடிகர் பாபுகணேஷால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஜா. சென்னை சட்டக் கல்லூரியில் படித்துள்ள தனுஜா, சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் மீது சமீபத்தில்தயாரிப்பாளர் பியாரிலால் குந்தாஷா ஒரு பரபரப்புப் புகாரைக் கூறினார். தன்னிடம் நெருக்கமாக பழகி விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டார் தனுஜா. பணத்தைக் கேட்டால் அமைச்சர்ஜெயக்குமாருடன் தனக்குள்ள நெருக்கத்தைக் கூறி மிரட்டுவதாக குந்தாஷா தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந் நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு குந்தாஷா மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் நடிகை தனுஜா புகார் கொடுத்தார்.அதில், 2 அடியாட்களுடன் குந்தாஷா வந்து தன்னை 2வது கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார் என்றும், திருமணம்செய்யாவிட்டால் பெயரைக் கெடுத்து விடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் கூறியிருந்தார் தனுஜா. இந்தப் புகாரின் பேரில் குந்தாஷாவை திருமங்கலம் போலீஸார் மணலியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அழைத்து வந்துஅண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையின் முடிவில், நேற்று (திங்கள்கிழமை) மாலை எழும்பூர் 5வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் குந்தாஷாவைஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பியாரிலால் சென்னைமத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். பியாரிலால் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை தனுஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பியாரிலால் குந்தாஷாவுக்கு சரியானதண்டனை கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் எனக்கு உதவிய நடிகர் விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுஅவர் கூறியுள்ளார்.
நடிகை தனுஜாவை 2வது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர்பியாரிலால் குந்தாஷா 15 நாள் சிறைக் காவலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பல்வேறு படங்களுக்குப் பூஜை போட்டு அவற்றில் பெரும்பாலானவற்றை எடுத்து முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவரும் "பிரபல இயக்குனர், நடிகர் பாபுகணேஷால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஜா.
சென்னை சட்டக் கல்லூரியில் படித்துள்ள தனுஜா, சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் மீது சமீபத்தில்தயாரிப்பாளர் பியாரிலால் குந்தாஷா ஒரு பரபரப்புப் புகாரைக் கூறினார்.
தன்னிடம் நெருக்கமாக பழகி விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டார் தனுஜா. பணத்தைக் கேட்டால் அமைச்சர்ஜெயக்குமாருடன் தனக்குள்ள நெருக்கத்தைக் கூறி மிரட்டுவதாக குந்தாஷா தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு குந்தாஷா மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் நடிகை தனுஜா புகார் கொடுத்தார்.அதில், 2 அடியாட்களுடன் குந்தாஷா வந்து தன்னை 2வது கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார் என்றும், திருமணம்செய்யாவிட்டால் பெயரைக் கெடுத்து விடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் கூறியிருந்தார் தனுஜா.
இந்தப் புகாரின் பேரில் குந்தாஷாவை திருமங்கலம் போலீஸார் மணலியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அழைத்து வந்துஅண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில், நேற்று (திங்கள்கிழமை) மாலை எழும்பூர் 5வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் குந்தாஷாவைஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பியாரிலால் சென்னைமத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
பியாரிலால் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை தனுஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பியாரிலால் குந்தாஷாவுக்கு சரியானதண்டனை கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் எனக்கு உதவிய நடிகர் விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுஅவர் கூறியுள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?