Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோடிகள் தருகிறேன் என்கிறார் பிக் பாஸ், நான் தான் மறுக்கிறேன்: நடிகை பரபரப்பு பேட்டி
மும்பை: கோடிகள் தருவதாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாக தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் அவர் நடிகர் சல்மான் கானை விமர்சித்துள்ளார்.
தனுஸ்ரீ
சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பெயர் போனவர்களாக பார்த்து தான் போட்டியாளர்களாக தேர்வு செய்வார்கள். இந்நிலையில் அடுத்த சீசனில் நிச்சயம் தனுஸ்ரீ தத்தா கலந்து கொள்வார் என்ற தகவல் தீயாக பரவியது. இது குறித்து அறிந்த அவர் கோபம் அடைந்துள்ளார்.
சல்மான் கான்
நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புகார் தெரிவிப்பதாக கூறி சமாளிக்க இப்படி ஒரு தகவலை பரப்புகிறார்கள். சல்மான் கான் கடவுள் என்றும், பிக் பாஸ் சொர்க்கம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா, கண்டிப்பாக இல்லை என்று தனுஸ்ரீ கூறியுள்ளார். தனுஸ்ரீ சல்மானை பற்றி பேசியது அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
முடியாது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கோடிக் கணக்கில் பணம் தருவதாக இத்தனை ஆண்டுகளாக என்னை அணுகி கூறி வருகிறார்கள். நான் முடியவே முடியாது என்று தெரிவித்து வருகிறேன் என்று புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் தனுஸ்ரீ. தனுஸ்ரீ-நானா விவகாரம் குறித்து சல்மான் கானிடம் கேட்டதற்கு, எனக்கு அது பற்றி தெரியாது என்றார்.
சினிமா
நான் விளம்பரம் தேட நானா படேகர் மீது புகார் தெரிவிக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமை பற்றி தான் பேசுகிறேன் என்கிறார் தனுஸ்ரீ. தனுஸ்ரீயின் பேச்சில் உண்மை இருப்பதாக உணர்வதாக பாலிவுட் நடிகைகள் பலர் தெரிவித்துள்ளனர். தனுஸ்ரீயை பார்த்து பிற நடிககைளும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி துணிச்சலாக பேசத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.