Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகையிடம் காலா வில்லன் தவறாக நடந்ததற்கு ஆதாரம் இருக்கு: டாப்ஸி பரபரப்பு
மும்பை: தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக ஆதாரம் இருக்கிறது என்கிறார் நடிகை டாப்ஸி.
பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ புகார் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி அவர் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது, ஆதரவும் கிடைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து டாப்ஸி கூறியிருப்பதாவது,
தனுஸ்ரீ
சம்பவம் நடந்தபோதே பேசியிருக்க வேண்டியது தானே என்று நான் தனுஸ்ரீயிடம் கேட்க மாட்டேன். அவர் ஏற்கனவே இது குறித்து புகார் தெரிவித்திருக்கிறார். அவரை அமைதியாக்கிவிட்டனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தற்போது தனது குரலை உயர்த்தியுள்ளார்.
எனக்கு தனுஸ்ரீ மீதோ அவரின் நோக்கம் மீதோ சந்தேகமே இல்லை.
ஆதாரம்
சம்பவம் நடந்திருக்கிறது. அது நடந்தது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. அதனால் அவர் 10 ஆண்டுகள் கழித்தோ 40 ஆண்டுகள் கழித்தோ புகார் தெரிவிப்பது பெரிய விஷயம் இல்லை. இந்த சம்பவம் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் துணிச்சலாக பதில் அளித்து வருகிறார். அவர் செயலில் நேர்மை இருக்கிறது.
பெண்கள்
தனுஸ்ரீயை பார்த்து அவர் போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக பேச வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பலர் என்னிடம் தெரிவித்துள்ளனர். நான் என் மனதில் பட்டதை கூறுகிறேன். என்னால் போலியாக இருக்க முடியாது. என் மனசாட்சியை கொன்று வாழ முடியாது.
பயம்
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள், பேசுவார்கள் என்று பயந்து எல்லாம் என்னால் வாழ முடியாது. என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி தான் வாழ்வேன். அடுத்தவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுபவள் நான் இல்லை. என மனசு சுத்தமாக உள்ளதால் இரவில் நல்லபடியாக தூங்குகிறேன் என்கிறார் டாப்ஸி.
பொய்
தனுஸ்ரீயிடம் நான் தவறாக நடக்கவே இல்லை என்று நானா படேகர் கூறி வருகிறார். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அவர் கூறி வரும் நிலையில் அது நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக டாப்ஸி கூறியிருக்கிறார். நானா படேகர் தனுஸ்ரீக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இளையராஜா பயோபிக்.. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்களா?.. ஃபேன்ஸ் ஆச்சரியம்
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!