Don't Miss!
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எனக்கு பணம் வேணும்... கதை எப்படி வேணா இருந்து தொலைக்கட்டும் - டாப்ஸி
டாப்ஸி நடித்த படம் எதுவும் பிச்சிக்கிட்டு ஓடவில்லை என்றாலும், அவரது சிவப்புத் தோல் நம்ம ஊர் இயக்குநர்களை எக்கச்சக்கமாக ஈர்த்துவிட்டது.
அவரது கால்ஷீட்டை விரும்பி கேட்டு வருகிறார்களாம். இப்போது தெலுங்கில் இரண்டு, தமிழில் இரண்டு, இந்தியில் ஒன்று என 5 படங்களை கைவசம் வைத்திருக்கும் டாப்ஸி, அதிரடியாக சம்பளத்தை உயர்த்திவிட்டார்.
ஏன் இப்படி ஏத்திட்டீங்க? என கேட்பவர்களுக்கு டாப்ஸி சொல்லும் பதில் பக்கா 'தொழில்முறை'!
இதோ அம்மணியின் பதில்...
"பணம் எல்லோருக்கும் முக்கியம். பணம் இல்லாமல் எதுவும் இல்லை. நான் பணத்துக்காகத்தான் நடிக்கிறேன். சில நடிகைகள் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக இருந்தால் சம்பளம் இல்லாமல் நடிப்பேன் என்று சொல்வாங்க. அதெல்லாம் பொய். சம்பளம் இல்லாமல் யாரும் நடிக்கமாட்டார்கள்.
நடிகைகள் எல்லோருமே சம்பாதிக்கத்தான் நடிக்க வந்து இருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் அல்ல. அதை காப்பாற்றவும் தெரிந்து இருக்க வேண்டும். நான் நடிக்கும் படங்களில் எனக்கு வரவேண்டிய சம்பள பணத்தை கறாராக பேசி வாங்கிடுவேன்," என்றார்.
டாப்ஸி பண்ணு... சமத்துப் பொண்ணு!