Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திரையில் 10 ஆண்டுகளை கடந்த ஆடுகளம் நாயகி... தயாரிப்பாளராகிறார் டாப்சி
மும்பை : கோலிவுட்டில் ஆடுகளம் படம் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை டாப்சி.
டாப்சி தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
திரைத்துறையில் 10 ஆண்டுகளை கடந்துள்ள இவர், தற்போது புதிய தளத்தில் கால் பதித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தெலுங்கில் தயாராகவுள்ள ராட்சசன் 2ம் பாகம்.. ஹீரோவாக முன்னனி தமிழ் நடிகர்
ஆடுகளத்தில் அறிமுகம்
நடிகை டாப்சி தனுஷுடன் இணைந்து ஆடுகளம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர். அந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார் டாப்சி. சமீபத்தில் இவரது நடிப்பில் இந்தியில் வெளிவந்த ஹசீன் தில்ருபா படம் நெட்பிளிக்சில் வெளியானது.
அனபெல் சுப்ரமணியம் படம்
விக்ராந்த் மாசேவுடன் இவர் நடித்திருந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதியுடன் அனபெல் சுப்ரமணியம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தீபக் சுந்தர்ராஜன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளன.
ட்விட்டரில் அறிவிப்பு
திரைத்துறையில் 10 ஆண்டுகளை கடந்துள்ள டாப்சி, தற்போது அடுத்ததாக தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தான் திரைத்துறைக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என்றும் ஆனால் தற்போது தான் இதில் வெற்றிகரமான நடிகையாக வலம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பு நிறுவனம்
தனக்கு அனைத்தையும் தந்துள்ள திரைத்துறைக்கு திரும்பவும் எதையாவது செய்ய வேண்டும் ஆவல் தனக்கு இருப்பதாகவும் அதனால் தற்போது அவுட்சைடர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளதாகவும் அதை வெற்றிகரமாக நடத்த அனைவரது வாழ்த்துக்களும் தேவை என்றும் கூறியுள்ளார்.