டுவிட்டரில் 1 லட்சத்தைத் தாண்டிய டாப்ஸி
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷின் ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. ஆடுகளத்தை தொடர்ந்து அவர் நடித்த வந்தான் வென்றான் ஓடவில்லை. அதன் பிறகு அவர் டோலிவுட்டுக்கு சென்றார். அங்கு படுகவர்ச்சியாக நடித்து வரும் அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். தனக்கு ஆந்திராவில் நல்ல மார்க்கெட் இருப்பதை உணர்ந்த அவர் அதை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் உள்ளார்.
விளைவு தற்போது அவர் கையில் 3 தெலுங்கு படங்கள் உள்ளன. இது தவிர்த்து தமிழில் மறந்தேன் மன்னித்தேன் மற்றும் இந்தியில் ஒரு படத்திலும் நடிக்கிறார். டுவிட்டரி்ல் உள்ள டாப்ஸியின் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால் டோலிவுட் ராணி நடிகை இலியானாவுக்கு 1,28,000க்கும் அதிகமான பின்தொடர்வோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த டாப்ஸியின் டுவீட்,
டுவிட்டரில் எனக்கு 1 லட்சத்தி்ற்கும் அதிகமான பாலோயர்கள் இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இதனால் நான் படு குஷியாக உள்ளேன். எனது பாலோயர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பலரால் விரும்பப்படுவது பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












