Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பஸ்ஸில் ஆண்கள் என்னை கண்ட இடத்தில் தொட்டுள்ளனர்: டாப்ஸி ஓபன் டாக்
மும்பை: டெல்லியில் படிக்கும் காலத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது கண்ட இடத்தில் தொட்டு ஆண்கள் வம்பிழுத்ததாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருபவர் டாப்ஸி. அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ள பிங்க் இந்தி படம் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் டாப்ஸி ஈவ் டீஸிங் பற்றி கூறுகையில்,
டெல்லி
நான் டெல்லியில் இருந்த போது தினமும் ஈவ் டீஸிங் நடந்துள்ளது. நான் இரண்டு ஆண்டுகள் கல்லூரிக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தேன். அதன் பிறகு 19 வயதில் கார் வாங்கினேன்.
பேருந்து
நான் கார் வாங்கும் முன்பு டிசிசி பேருந்துகளில் பயணம் செய்தேன். பேருந்தில் ஆண்கள் கிண்டல் செய்ததுடன் கண்ட இடங்களில் எல்லாம் என்னை தொட்டார்கள்.
நெரிசல்
டெல்லியில் திருவிழாக் காலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு சென்றபோது எல்லாம் ஆண்கள் பெண்களை கண்ட இடங்களில் தொடுவார்கள். இது டெல்லியில் வழக்கமான ஒன்று. இது எனக்கும் நடந்துள்ளது.
ஒன்னும் செய்யவில்லை
ஆண்கள் என்னை கண்ட இடங்களில் தொட்டபோது அதை எதிர்த்துக் கேட்காமல் என் தவறு போன்று நினைத்து ஓடினேன். அங்கு போகாதே, அந்த உடை அணியாதே, அதை செய்யாதே, இதை செய்யாதே என்று சொல்லி வளர்த்துவிட்டார்களே.