Don't Miss!
- News எல்லா தப்பையும் நீங்க தான் பண்ணீங்க..கக்கூஸ் கூட போக முடியல! திணறும் ரயில் பயணிகள்..தீர்வுதான் என்ன?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும்- டாப்ஸி வலியுறுத்தல்
சென்னை: நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான தண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று கூறியுள்ளார் நடிகை டாப்ஸி.
நாடு முழுக்க அன்றாடம் நிகழ்ந்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து கோபமடைந்துள்ள டாப்சி, இதுகுறித்து கூறுகையில், "பாலியல் பலாத்கார குற்றங்கள் தினசரி அதிகரித்து வருவது வேதனையைத் தருகிறது. சிறுமிகளை பெரும்பாலும் குறிவைக்கிறார்கள் இந்த கொடூர மனம் படைத்தவர்கள்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
நீதிமன்றத்தில் இவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் தாமதமானால் மேலும் இதுபோன்ற வன்முறைகள் அதிகரிக்கவே செய்யும்.
நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விரைவாக விசாரணைகளை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதிகமான அபராதமும் விதிக்க வேண்டும். அப்போது தான் சமூகத்தில் கற்பழிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது," என்றார்.