ஹைகோர்ட் உத்தரவால் ரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா
Recommended Video

சென்னை: நடிகை த்ரிஷா ரூ. 1.16 கோடி அபராதம் செலுத்த வேண்டியதில் இருந்து தப்பியுள்ளார்.
கடந்த 2010-2011ம் நிதி ஆண்டில் ரூ. 89 லட்சம் சம்பாதித்ததாக நடிகை த்ரிஷா வருமான வரித்துறைக்கு கணக்கு அளித்திருந்தார். அவர் அந்த ஆண்டு அவர் கூடுதலாக ரூ. 3. 52 கோடி சம்பாதித்தாகவும், பொய் கணக்கு காட்டியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்தது.

மேலும் த்ரிஷாவுக்கு ரூ. 1.16 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து த்ரிஷா நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமோ தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் த்ரிஷா ரூ. 3.52 கோடிக்கு கணக்கு காட்டியிருப்பதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பால் த்ரிஷா நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











