Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹைகோர்ட் உத்தரவால் ரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா
Recommended Video
சென்னை: நடிகை த்ரிஷா ரூ. 1.16 கோடி அபராதம் செலுத்த வேண்டியதில் இருந்து தப்பியுள்ளார்.
கடந்த 2010-2011ம் நிதி ஆண்டில் ரூ. 89 லட்சம் சம்பாதித்ததாக நடிகை த்ரிஷா வருமான வரித்துறைக்கு கணக்கு அளித்திருந்தார். அவர் அந்த ஆண்டு அவர் கூடுதலாக ரூ. 3. 52 கோடி சம்பாதித்தாகவும், பொய் கணக்கு காட்டியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்தது.
மேலும் த்ரிஷாவுக்கு ரூ. 1.16 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து த்ரிஷா நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமோ தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் த்ரிஷா ரூ. 3.52 கோடிக்கு கணக்கு காட்டியிருப்பதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பால் த்ரிஷா நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.