twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விவேக்குக்கு உதவிய தேஜாஸ்ரீ! புல்லரித்துப் போய் காணப்படுகிறார் தேஜாஸ்ரீ. பின்னே, போற இடங்களில் எல்லாம் ரசிகர்களும், பொதுமக்களும் அன்பைக் கொட்டினால் அவருக்குப் புல்லரிக்காதா என்ன?சின்ன வீடா வரட்டுமா என்று கேட்டு தமிழ் சினிமாவில் நுழைந்த தேஜாஸ்ரீ, இப்போது நல்ல துட்டு சேர்த்து,மும்பையில் பெரிய வீடாகவே வாங்கி குடியேறிவிட்டார்.முதல் படத்தில் கிடைத்த அதே வரவேற்புதான் இன்றும் தனக்கு இருப்பதாக புளகாங்கிதம் அடைகிறார் தேஜாஸ்ரீ.கையில் பெரிய அளவில் படங்கள் இல்லாவிட்டாலும் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தைரொம்ப ரொம்ப நம்பியிருக்கிறார்.எனது திரையுலக வாழ்க்கையிலேயே மிகவும் திருப்தியாகவும், நிறைவாகவும் இருந்தது இந்தப் படத்தில் நான்ஆடியுள்ள நடனமும்தான் நடித்த காட்சிகளும் தான். நான் போட்ட ஆட்டம் மிக அழகாக வந்திருக்கிறது.இப்பாடலின் மூலம் இன்னும் நிறையவே பேசப்படுவேன் என்கிறார் தேஜாஸ்ரீ.நடிப்பைத் தவிர என்ன விழாவுக்குக் கூப்பிட்டாலும் போய் ஆடிவிட்டு வருகிறார் தேஜாஸ்ரீ. அதிலும் நல்ல டப்புகிடைக்கிறதாம்.அதே நேரம் கல்லூரி விழாக்களில் ஆடக் கூப்பிட்டால் ரேட்டைக் கூட குறைத்துக் கொண்டு ஆடவந்துவிடுகிறார். கல்லூரி மாணவ, மாணவியரை நேரடியாக வளைக்கும் வாய்ப்பு கிடைப்பதால், அது தனதுகேரியருக்கும் உதவும் என்ற மார்க்கெடிங் ஸ்ட்ராடிஜி தான் காரணமாம்.சின்னா வீடா பாட்டு இன்னும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஹாட் பேவரைட்டாக உள்ளது என்று கூறும்தேஜா, அந்தப் பாட்டுக்கு இத்தனை ரசிகர்களா என்று நான் பிரமித்துப் போய் விட்டேன் என்கிறார்.இப்படியாக மகிழ்சசியோடு உலா வரும் தேஜாவுக்கு சமீபத்தில் ஒரு புது பாய் பிரண்ட் கிடைத்துள்ளார்.அவர் வேறு யாருமல்ல, நம்ம காமெடி விவேக்தான். அயோ, விவேக் மாதிரி ஒரு நபரை இதுவரை நான்பார்த்ததே இல்லை. சென்ஸ் ஆப் ஹியூமர் நிறைந்து வழியும் ஜாலிப் பேர்வழி என்கிறார்.விவேக்கை தேஜாவுக்குப் பிடித்துப் போக இன்னொரு காரணம் உள்ளது. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துரொம்ப நாளாக சொல்லி அடிப்பேன் என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள் என்பது தான் அது.சொல்லி அடிப்பேனில் விவேக்குக்கு ரெண்டு ஜோடிகள். ஒருத்தர் மன்மத ராணி சாயா சிங். இன்னொருவர்தேஜாஸ்ரீ. இவர்கள் இருவருடனும் சேர்ந்து ஒரு குத்துப் பாட்டுக்கும் ஆடியுள்ளார் விவேக். இந்த பாட்டுபடமாக்கப்பட்டபோது விவேக்குக்கு மூவ்மெண்ட்ஸ் வைக்கத் தெரியாமல் திணறியுள்ளார்.தேஜாதான் எப்படி காலைத் தூக்குவது, எப்படி காலை, கையை ஆட்டுவது என்று சொல்லிக் கொடுத்துஉதவினாராம்.

    By Staff
    |

    புல்லரித்துப் போய் காணப்படுகிறார் தேஜாஸ்ரீ. பின்னே, போற இடங்களில் எல்லாம் ரசிகர்களும், பொதுமக்களும் அன்பைக் கொட்டினால் அவருக்குப் புல்லரிக்காதா என்ன?

    சின்ன வீடா வரட்டுமா என்று கேட்டு தமிழ் சினிமாவில் நுழைந்த தேஜாஸ்ரீ, இப்போது நல்ல துட்டு சேர்த்து,மும்பையில் பெரிய வீடாகவே வாங்கி குடியேறிவிட்டார்.

    முதல் படத்தில் கிடைத்த அதே வரவேற்புதான் இன்றும் தனக்கு இருப்பதாக புளகாங்கிதம் அடைகிறார் தேஜாஸ்ரீ.

    கையில் பெரிய அளவில் படங்கள் இல்லாவிட்டாலும் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தைரொம்ப ரொம்ப நம்பியிருக்கிறார்.


    எனது திரையுலக வாழ்க்கையிலேயே மிகவும் திருப்தியாகவும், நிறைவாகவும் இருந்தது இந்தப் படத்தில் நான்ஆடியுள்ள நடனமும்தான் நடித்த காட்சிகளும் தான். நான் போட்ட ஆட்டம் மிக அழகாக வந்திருக்கிறது.இப்பாடலின் மூலம் இன்னும் நிறையவே பேசப்படுவேன் என்கிறார் தேஜாஸ்ரீ.

    நடிப்பைத் தவிர என்ன விழாவுக்குக் கூப்பிட்டாலும் போய் ஆடிவிட்டு வருகிறார் தேஜாஸ்ரீ. அதிலும் நல்ல டப்புகிடைக்கிறதாம்.

    அதே நேரம் கல்லூரி விழாக்களில் ஆடக் கூப்பிட்டால் ரேட்டைக் கூட குறைத்துக் கொண்டு ஆடவந்துவிடுகிறார். கல்லூரி மாணவ, மாணவியரை நேரடியாக வளைக்கும் வாய்ப்பு கிடைப்பதால், அது தனதுகேரியருக்கும் உதவும் என்ற மார்க்கெடிங் ஸ்ட்ராடிஜி தான் காரணமாம்.

    சின்னா வீடா பாட்டு இன்னும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஹாட் பேவரைட்டாக உள்ளது என்று கூறும்தேஜா, அந்தப் பாட்டுக்கு இத்தனை ரசிகர்களா என்று நான் பிரமித்துப் போய் விட்டேன் என்கிறார்.

    இப்படியாக மகிழ்சசியோடு உலா வரும் தேஜாவுக்கு சமீபத்தில் ஒரு புது பாய் பிரண்ட் கிடைத்துள்ளார்.


    அவர் வேறு யாருமல்ல, நம்ம காமெடி விவேக்தான். அயோ, விவேக் மாதிரி ஒரு நபரை இதுவரை நான்பார்த்ததே இல்லை. சென்ஸ் ஆப் ஹியூமர் நிறைந்து வழியும் ஜாலிப் பேர்வழி என்கிறார்.

    விவேக்கை தேஜாவுக்குப் பிடித்துப் போக இன்னொரு காரணம் உள்ளது. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துரொம்ப நாளாக சொல்லி அடிப்பேன் என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள் என்பது தான் அது.

    சொல்லி அடிப்பேனில் விவேக்குக்கு ரெண்டு ஜோடிகள். ஒருத்தர் மன்மத ராணி சாயா சிங். இன்னொருவர்தேஜாஸ்ரீ. இவர்கள் இருவருடனும் சேர்ந்து ஒரு குத்துப் பாட்டுக்கும் ஆடியுள்ளார் விவேக். இந்த பாட்டுபடமாக்கப்பட்டபோது விவேக்குக்கு மூவ்மெண்ட்ஸ் வைக்கத் தெரியாமல் திணறியுள்ளார்.

    தேஜாதான் எப்படி காலைத் தூக்குவது, எப்படி காலை, கையை ஆட்டுவது என்று சொல்லிக் கொடுத்துஉதவினாராம்.

      Read more about: tejasree helps vivek
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X