பாலிவுட்டா வேண்டாம் சாமி..பட வாய்ப்புகளை மறுக்கும் இளம் நடிகை..இதுதான் காரணமா?
சென்னை : வளர்ந்து வரும் இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி பாலிவுட் படவாய்ப்புகளை மறுத்து வருவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தெலுங்கில் வெளியான உப்பென்னா திரைப்படம் விஜய்சேதுபதியின் மகளாக நடித்து சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார் கீர்த்தி ஷெட்டி. வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் தன்னுடைய முதல் படம் வெளியாகும் முன்பே 3 புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

கீர்த்தி ஷெட்டி
"கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு" பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்டு,இளசுகளின் மனதில் புடு புடுவென புல்லட்டு ஓட்டிவிட்டார் கீர்த்தி ஷெட்டி. இவர் நடிப்பில் உருவான வாரியர் என்ற திரைப்படம் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த போதும், பால் முகம் மாறாத வாட்ட சாட்டமான அழகால் தமிழ் ஆடியன்ஸ் கிளீன்போல்டாகி விட்டார்கள்.

முன்னணி நடிகர்களுடன்
தெலுங்கு படங்களில் அறிமுகமாகி இருந்தாலும் குறுகிய காலத்திலேயே கடகடவென உயர்ந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக அளவுக்கு வளர்ந்துவிட்டார். தற்போது சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கா முடி திரைப்படத்திலும், வெங்கட்பிரபு இயக்க உள்ள ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். அதேபோல தெலுங்கிலும் "ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பாளி" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மீரா ஜாஸ்மின் போல
இந்நிலையில், மச்சர்லா நியோஜாகவர்கம் என்ற தெலுங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய கீர்த்தி ஷெட்டி, நான் நடித்த முதல் படமான உப்பென்னா படத்தை பார்த்துவிட்டுத்தான் இயக்குநர் லிங்குசாமி, தி வாரியர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார். அத்துடன் மீரா ஜாஸ்மின் போல இருப்பதாக அவர் கூறியுள்ளார். தி வாரியர் படப்பிடிப்பின் போது அவரிடம் பல முறை திட்டுவாங்கி அழுது இருக்கிறேன்.ஆரம்பத்தில் எனக்கு தமிழ் புரியாததால் என்னால், அவர் கூறியதை புரிந்து கொள்ளமுடிவில்லை என்றார்.

பாலிவுட்டா வேண்டாம் சாமி
மேலும், சினிமாவில் வெற்றியும் தோல்வியும் வருவது சகஜம்தான். ஆனால், தற்போது படங்களிலும் என் கதாபாத்திரம் பிடித்திருந்தால்தான் மட்டுமே நடிக்க ஒத்துக்கொள்கிறேன். பாலிவுட்டில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் அவற்றை மறுத்து வருகிறேன். தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் நடித்து சாதிக்க வேண்டும் அதன்பிறகு தான் பாலிவுட்டில் நடிப்பது பற்றி யோசிக்க முடியும் என்றார்.


Click it and Unblock the Notifications











