Don't Miss!
- Technology செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி அட்மாஸ்.. 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
- News திண்டுக்கல்: மலைக்கோட்டை மாநகரில் மலையேறப் போகும் கூட்டணி கட்சி எது? போராடும் சிபிஎம், எஸ்டிபிஐ!
- Lifestyle 100 ஆண்டுகள் கழித்து மீனத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
- Sports RCB vs SRH : எல்லை மீறிப் போன ஆர்சிபி வீரர்கள்.. "நல்ல வார்த்தையில்" திட்டிய விராட் கோலி.. கதறிய ரசிகர்கள்
- Automobiles டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
ஒத்துழைக்க மறுப்பு... நயன்தாராவுக்கு தெலுங்கில் நடிக்கத் தடை?
ஹைதராபாத்: நடிகை நயன்தாரா தெலுங்கில் நடிக்கத் தடை விதிக்க, தெலுங்கு திரையுலகினர் முயற்சி எடுத்து வருகிறார்கள்.
தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காத நடிகைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழ் சினிமா.
இதே பாணியைப் பின்பற்றி, தெலுங்கு சினிமா உலகமும் ஒத்துழைப்பு தராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.
முன்பு இலியானா, தான் நடித்த ஜூலாய் என்ற தெலுங்கு படத்தின் விழாவில் பங்கேற்கவில்லை. அந்த படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். இதனால் கடுப்பான இயக்குநர் திரிவிக்ரம் இலியானா வேறு எந்த தெலுங்குப் படத்திலும் நடிக்க முடியாத அளவுக்கு, சக இயக்குநர்களிடம் அவரைப் பற்றி எதிர்மறையாகக் கூறினார்.
மற்ற இயக்குநர்களும் புறக்கணித்துவிட்டதால் இப்போது தெலுங்கில் படங்கள் இல்லாமல், ஹிந்தியில் கிடைக்கிற வேடங்களில் நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் இலியானா.
இப்போது நயன்தாரா. இவர் நடித்துள்ள அனாமிகா படத்தின் இசை - ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு வராமல் புறக்கணித்ததை பெரிய விவகாரமாக்க முடிவு செய்துள்ள இயக்குநர் சேகர் கம்முலா, நயன்தாராவை வேறு எந்த தெலுங்குப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று கூறி வருகிறாராம்.
நயன்தாராவுக்கு தெலுங்கில் நடிக்க தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறாராம்.