twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமைச்சருடன் தொடர்பு: நடிகை தனுஜா அதிரடி நடிகை தனுஜாவுக்கும், சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ளதகவல்களால் கோலிவுட்டிலும், அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தனுஜா என்ற நடிகை மீது தயாரிப்பாளர் பியாரிலால் குந்தன்ஷா என்பவர் சில நாட்களுக்கு முன் பெரும் குற்றச்சாட்டைசுமத்தினார். எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவும் அவர் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், நடிகை தனுஜா குறித்து சரமாரியாக புகார்களைக் கூறி தன்னிடம் ரூ. 10 லட்சம் வரை தனுஜா ஏமாற்றி விட்டதாககூறியிருந்தார். தன்னை மயக்கி, வலையில் வீழ்த்தி பலமுறை பணம் பறித்ததாகவும், தனுஜா மீது குந்தன்ஷா புகார்கூறியிருந்தார். இதுகுறித்து நாம் ஏற்கனவே விலாவாரியாக செய்தி வெளியிட்டுள்ளோம்.குந்தன்ஷா ஏற்கனவே ரத்னா, முள்ளில் ரோஜா ஆகிய இரு படங்களைத் தயாரித்தவர். தனுஜாவையும், மாதவனையும் வைத்துமாஸ் என்ற படத்தையும் தயாரிக்கவிருந்தார். இந் நிலையில்தான் தனுஜாவுக்கும், அவருக்கும் லடாய் ஏற்பட்டு பிரச்சினைகோர்ட்டு வரைக்கும் வந்துள்ளது.தனுஜா குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார் குந்தன்ஷா. அதுகுறித்து குந்தன்ஷாவே கூறுவதைக்கேட்போம்:தனுஜாவுக்காக நான் நிறைய செலவு செய்திருக்கிறேன். அந்தப் பொண்ணு போட்டுள்ள டிரஸ்லேருந்து நான் வாங்கிக்கொடுத்ததுதான். சட்டப் படிப்பு முடிச்சு, வக்கீலா பதிவு செய்யறப்போ தேவைப்பட்ட வக்கீல் கோட் கூட நான்தான் வாங்கிக்கொடுத்துச்சு.உடம்பு சரியில்லாம போய், சுந்தரம் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி ட்ரீட்மென்ட் எடுத்தப்பப்பவும், நான்தான் 54,000 ரூபாய்பில்லை செட்டில் பண்ணிச்சு.அப்புறம் உடம்ப பில்டப் பண்ணனும்னு சொல்லி ஜிம்லே சேர்ந்துச்சு. அப்பவும் நான்தான் ஜிம்முக்குப் பணம் கொடுத்தேன்.இப்படி எல்லாத்தையும் என் மூலமா அனுபவிச்சிட்டு இப்ப என் மேலேயே தப்பு தப்பா அந்தப் பொண்ணு புகார் சொல்லுது.காலேஜ்ல படிக்கிறப்பவே அது தப்பான பொண்ணா இருந்தது.ஒரு நாள் நான் அண்ணா நகர்ல இருக்கிற தனுஜா வீட்டுக்குப் போனேன். காலிங் பெல் அடிச்சிட்டு காத்திருந்தப்ப அது வந்துகதவைத் திறந்தது. பாத்ரூம்ல குளிச்சிட்டிருந்த அந்தப் பொண்ணு, அப்படியே வந்து கதவைத் திறந்தது. அரை குறை டிரஸ்லெவந்த அந்தப் பொண்ணைப் பார்த்து நான் ஷாக் ஆயிட்டேன்.போயிட்டு அப்புறமா வர்றேன்னு நான் சொன்னப்ப. இல்ல, இல்ல, அப்பா, அம்மா வீட்டுல இல்லை, நீங்க வாங்கன்னு உள்ளேகூட்டிட்டுப் போச்சு. அப்புறம் கதவை பூட்டிக்கிட்டது. நீங்க வாங்கித் தந்த டிரஸ்தான் சார், உங்க முன்னாடியே மாத்திக்கிட்டாஎன்ன தப்புன்னு கேட்டுக்கிட்டு என் முன்னாடியே டிரஸ் சேஞ்ச் செய்தது.யார் கேரக்டர் தப்புன்னு இப்ப புரியுதா? தொப்பை விழுந்ததும் அதைக் கரைக்கனும்னு என்கிட்ட சொல்லுச்சு. உடனே அந்தப்பொண்ணை அப்போலோவுல அட்மிட் பண்ணி சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்தேன். அப்ப இரவு 9 மணிக்கு மேல அமைச்சர்ஜெயக்குமார் வந்தாரு. என்னம்மா, எப்படி இருக்கேன்னு கேட்டு பேசிட்டுப் போனாரு. அப்பத்தான் எனக்குத் தெரிஞ்சது, இந்தப்பொண்ணுக்கு பல தொடர்புகள் இருக்குதுன்னு.என்னோட பணத்துல ரூ. 25 லட்சம் வரைக்கும் நான் செலவிட்டிருக்கேன். ஆனால் என்கிட்ட இப்போ 10 லட்சம் ரூபாய்க்குத்தான்ஆதாரம் இருக்கு. தனுஜாவோட அப்பா சாதாரண எஸ்.டி.டி. பூத் வச்சிருக்காரு. அப்புறம் எப்படி அந்தப் பொண்ணுக்கு 2 வீடு, 3கார், பாங்க் பேலன்ஸ் எல்லாம் வந்தது?அந்தப் பொண்ணோட செல்போன வாங்கி அதுல உள்ள நம்பர்களைப் பார்த்தாலே தெரிஞ்சு போயிடும், அதோட தொடர்புகள்பத்தி என்று மார்வாடி கலந்த தமிழில் புலம்புகிறார் குந்தன்ஷா.அமைச்சர் ஜெயக்குமார், தனுஜாவை வந்து மருத்துவமனையில் பார்த்ததாக குந்தன்ஷா சொல்லியிருப்பது புயலைக்கிளப்பியுள்ளது. இதை நடிகை தனுஜா மறுக்கவில்லை என்பதுதான் விசேஷம். குந்தன்ஷாவின் புகார்கள் குறித்து தனுஜா கூறும்போது, என்னைப் பத்தி நிறைய தப்பான செய்திகளை அவர் பரப்பிக்கிட்டிருக்கார்.நான் என்ன பிச்சைக்காயா, அவரிடம் வாங்கிப் போட்டுக்க. என்னோட காலேஜ் நிகழ்ச்சிக்கெல்லாம் அவரைக் கூட்டிட்டுப்போயிருக்கேன். அதை மறுக்கல, ஏன் என் வீட்டுக்குக் கூட கூட்டிட்டுப் போயிருக்கேன்.என்னோட பேக்கிரவுண்ட் குறித்து சக மாணவர்களுக்குத் தெரியட்டுமே என்கிற நோக்கத்தில்தான் கூட்டிட்டுப் போனேன்.ஒரு தடவை என்னோட கார்ல கூட்டிட்டுப் போனேன். அப்ப என் மேல கையைப் போட்டு கட்டிப் பிடிச்சார். பட்டுன்னு கன்னத்துலஅறஞ்சிட்டேன். அவருக்கு நான் ரொம்ப இடம் கொடுத்துட்டேன். அதான் பெரிய தப்பாப் போச்சு என்று ஆவேசமாக கூறினார்தனுஜா.சரி, அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, அமைச்சர் ஜெயக்குமாருடன்எனக்கு பழக்கம் உள்ளது. ஆனால் நான் அவரோட ஆசை நாயகிங்கற அளவுக்கு தொடர்புப் படுத்திப் பேசறாங்க. பேசட்டுமே,அதப் பத்தி எனக்குக் கவலையில்லை.எனக்கு அரசியல் பொது சேவையில் நிறைய ஆர்வம் உண்டு. என்னோட காலேஜ் விழாவுக்கு ஜெயக்குமார் வந்தப்ப, நானேதான்,அங்கிள் உங்களோட போன் நம்பர் கொடுங்கன்னு கேட்டு வாங்கினேன். நான் மிஸ் தமிழ்நாடு போட்டியில பரிசு வாங்கினப்பஅமைச்சர் ஜெயக்குமார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார்.இதுக்கப்புறம் என்னிடம் அவர் அடிக்கடி போன் செய்து பேசுவார், நானும் பேசுவேன். என்னிடம் ரொம்ப அன்பா பேசுவார்.யாராவது அமைச்சரோட உதவியைக் கோரி என்னிடம் வந்தால் அமைச்சரிடம் ரெகமண்ட் செய்து அனுப்புவேன். அவரும்செய்து கொடுப்பார்.எனக்கு பாய் பிரண்ட்ஸ் அதிகம் சார். இப்படிப் பழகறதெல்லாம் இங்கே சாதாரணமான விஷயம். இதை பெரிய விஷயமாக்கநினைக்கிறார் குந்தன்ஷா.எனக்கு விஜய்யை தெரியவே தெரியாது. இந்த லட்சணத்தில் நான் அவர் பெயரை சொல்லி 10 லட்சம் ஏமாத்திட்டதா குந்தன்ஷாகூறுகிறார். பப்ளிசிட்டி தேடனும்கிறதுக்காக இவ்வாறு விஜய் பெயரைச் சொல்கிறார் என்றார் தனுஜா படு போல்டாக.அமைச்சர் ஜெயக்குமாருக்கும், தனக்கும் தொடர்பு உள்ளது, அவர் என்னிடம் அன்பாகப் பேசுவார், அடிக்கடி பேசுவார், எனக்காகஎதையும் செய்வார் என்று தனுஜா படு ஓபனாகக் கூறியுள்ளது கோலிவுட்டில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பெரும்புயலைக் கிளப்பியுள்ளது.

    By Staff
    |

    நடிகை தனுஜாவுக்கும், சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ளதகவல்களால் கோலிவுட்டிலும், அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தனுஜா என்ற நடிகை மீது தயாரிப்பாளர் பியாரிலால் குந்தன்ஷா என்பவர் சில நாட்களுக்கு முன் பெரும் குற்றச்சாட்டைசுமத்தினார். எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவும் அவர் தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், நடிகை தனுஜா குறித்து சரமாரியாக புகார்களைக் கூறி தன்னிடம் ரூ. 10 லட்சம் வரை தனுஜா ஏமாற்றி விட்டதாககூறியிருந்தார். தன்னை மயக்கி, வலையில் வீழ்த்தி பலமுறை பணம் பறித்ததாகவும், தனுஜா மீது குந்தன்ஷா புகார்கூறியிருந்தார். இதுகுறித்து நாம் ஏற்கனவே விலாவாரியாக செய்தி வெளியிட்டுள்ளோம்.

    குந்தன்ஷா ஏற்கனவே ரத்னா, முள்ளில் ரோஜா ஆகிய இரு படங்களைத் தயாரித்தவர். தனுஜாவையும், மாதவனையும் வைத்துமாஸ் என்ற படத்தையும் தயாரிக்கவிருந்தார். இந் நிலையில்தான் தனுஜாவுக்கும், அவருக்கும் லடாய் ஏற்பட்டு பிரச்சினைகோர்ட்டு வரைக்கும் வந்துள்ளது.

    தனுஜா குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார் குந்தன்ஷா. அதுகுறித்து குந்தன்ஷாவே கூறுவதைக்கேட்போம்:

    தனுஜாவுக்காக நான் நிறைய செலவு செய்திருக்கிறேன். அந்தப் பொண்ணு போட்டுள்ள டிரஸ்லேருந்து நான் வாங்கிக்கொடுத்ததுதான். சட்டப் படிப்பு முடிச்சு, வக்கீலா பதிவு செய்யறப்போ தேவைப்பட்ட வக்கீல் கோட் கூட நான்தான் வாங்கிக்கொடுத்துச்சு.

    உடம்பு சரியில்லாம போய், சுந்தரம் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி ட்ரீட்மென்ட் எடுத்தப்பப்பவும், நான்தான் 54,000 ரூபாய்பில்லை செட்டில் பண்ணிச்சு.

    அப்புறம் உடம்ப பில்டப் பண்ணனும்னு சொல்லி ஜிம்லே சேர்ந்துச்சு. அப்பவும் நான்தான் ஜிம்முக்குப் பணம் கொடுத்தேன்.இப்படி எல்லாத்தையும் என் மூலமா அனுபவிச்சிட்டு இப்ப என் மேலேயே தப்பு தப்பா அந்தப் பொண்ணு புகார் சொல்லுது.காலேஜ்ல படிக்கிறப்பவே அது தப்பான பொண்ணா இருந்தது.

    ஒரு நாள் நான் அண்ணா நகர்ல இருக்கிற தனுஜா வீட்டுக்குப் போனேன். காலிங் பெல் அடிச்சிட்டு காத்திருந்தப்ப அது வந்துகதவைத் திறந்தது. பாத்ரூம்ல குளிச்சிட்டிருந்த அந்தப் பொண்ணு, அப்படியே வந்து கதவைத் திறந்தது. அரை குறை டிரஸ்லெவந்த அந்தப் பொண்ணைப் பார்த்து நான் ஷாக் ஆயிட்டேன்.

    போயிட்டு அப்புறமா வர்றேன்னு நான் சொன்னப்ப. இல்ல, இல்ல, அப்பா, அம்மா வீட்டுல இல்லை, நீங்க வாங்கன்னு உள்ளேகூட்டிட்டுப் போச்சு. அப்புறம் கதவை பூட்டிக்கிட்டது. நீங்க வாங்கித் தந்த டிரஸ்தான் சார், உங்க முன்னாடியே மாத்திக்கிட்டாஎன்ன தப்புன்னு கேட்டுக்கிட்டு என் முன்னாடியே டிரஸ் சேஞ்ச் செய்தது.

    யார் கேரக்டர் தப்புன்னு இப்ப புரியுதா? தொப்பை விழுந்ததும் அதைக் கரைக்கனும்னு என்கிட்ட சொல்லுச்சு. உடனே அந்தப்பொண்ணை அப்போலோவுல அட்மிட் பண்ணி சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்தேன். அப்ப இரவு 9 மணிக்கு மேல அமைச்சர்ஜெயக்குமார் வந்தாரு. என்னம்மா, எப்படி இருக்கேன்னு கேட்டு பேசிட்டுப் போனாரு. அப்பத்தான் எனக்குத் தெரிஞ்சது, இந்தப்பொண்ணுக்கு பல தொடர்புகள் இருக்குதுன்னு.

    என்னோட பணத்துல ரூ. 25 லட்சம் வரைக்கும் நான் செலவிட்டிருக்கேன். ஆனால் என்கிட்ட இப்போ 10 லட்சம் ரூபாய்க்குத்தான்ஆதாரம் இருக்கு. தனுஜாவோட அப்பா சாதாரண எஸ்.டி.டி. பூத் வச்சிருக்காரு. அப்புறம் எப்படி அந்தப் பொண்ணுக்கு 2 வீடு, 3கார், பாங்க் பேலன்ஸ் எல்லாம் வந்தது?

    அந்தப் பொண்ணோட செல்போன வாங்கி அதுல உள்ள நம்பர்களைப் பார்த்தாலே தெரிஞ்சு போயிடும், அதோட தொடர்புகள்பத்தி என்று மார்வாடி கலந்த தமிழில் புலம்புகிறார் குந்தன்ஷா.

    அமைச்சர் ஜெயக்குமார், தனுஜாவை வந்து மருத்துவமனையில் பார்த்ததாக குந்தன்ஷா சொல்லியிருப்பது புயலைக்கிளப்பியுள்ளது. இதை நடிகை தனுஜா மறுக்கவில்லை என்பதுதான் விசேஷம்.

    குந்தன்ஷாவின் புகார்கள் குறித்து தனுஜா கூறும்போது, என்னைப் பத்தி நிறைய தப்பான செய்திகளை அவர் பரப்பிக்கிட்டிருக்கார்.நான் என்ன பிச்சைக்காயா, அவரிடம் வாங்கிப் போட்டுக்க. என்னோட காலேஜ் நிகழ்ச்சிக்கெல்லாம் அவரைக் கூட்டிட்டுப்போயிருக்கேன். அதை மறுக்கல, ஏன் என் வீட்டுக்குக் கூட கூட்டிட்டுப் போயிருக்கேன்.

    என்னோட பேக்கிரவுண்ட் குறித்து சக மாணவர்களுக்குத் தெரியட்டுமே என்கிற நோக்கத்தில்தான் கூட்டிட்டுப் போனேன்.

    ஒரு தடவை என்னோட கார்ல கூட்டிட்டுப் போனேன். அப்ப என் மேல கையைப் போட்டு கட்டிப் பிடிச்சார். பட்டுன்னு கன்னத்துலஅறஞ்சிட்டேன். அவருக்கு நான் ரொம்ப இடம் கொடுத்துட்டேன். அதான் பெரிய தப்பாப் போச்சு என்று ஆவேசமாக கூறினார்தனுஜா.

    சரி, அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, அமைச்சர் ஜெயக்குமாருடன்எனக்கு பழக்கம் உள்ளது. ஆனால் நான் அவரோட ஆசை நாயகிங்கற அளவுக்கு தொடர்புப் படுத்திப் பேசறாங்க. பேசட்டுமே,அதப் பத்தி எனக்குக் கவலையில்லை.

    எனக்கு அரசியல் பொது சேவையில் நிறைய ஆர்வம் உண்டு. என்னோட காலேஜ் விழாவுக்கு ஜெயக்குமார் வந்தப்ப, நானேதான்,அங்கிள் உங்களோட போன் நம்பர் கொடுங்கன்னு கேட்டு வாங்கினேன். நான் மிஸ் தமிழ்நாடு போட்டியில பரிசு வாங்கினப்பஅமைச்சர் ஜெயக்குமார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார்.

    இதுக்கப்புறம் என்னிடம் அவர் அடிக்கடி போன் செய்து பேசுவார், நானும் பேசுவேன். என்னிடம் ரொம்ப அன்பா பேசுவார்.யாராவது அமைச்சரோட உதவியைக் கோரி என்னிடம் வந்தால் அமைச்சரிடம் ரெகமண்ட் செய்து அனுப்புவேன். அவரும்செய்து கொடுப்பார்.

    எனக்கு பாய் பிரண்ட்ஸ் அதிகம் சார். இப்படிப் பழகறதெல்லாம் இங்கே சாதாரணமான விஷயம். இதை பெரிய விஷயமாக்கநினைக்கிறார் குந்தன்ஷா.

    எனக்கு விஜய்யை தெரியவே தெரியாது. இந்த லட்சணத்தில் நான் அவர் பெயரை சொல்லி 10 லட்சம் ஏமாத்திட்டதா குந்தன்ஷாகூறுகிறார். பப்ளிசிட்டி தேடனும்கிறதுக்காக இவ்வாறு விஜய் பெயரைச் சொல்கிறார் என்றார் தனுஜா படு போல்டாக.

    அமைச்சர் ஜெயக்குமாருக்கும், தனக்கும் தொடர்பு உள்ளது, அவர் என்னிடம் அன்பாகப் பேசுவார், அடிக்கடி பேசுவார், எனக்காகஎதையும் செய்வார் என்று தனுஜா படு ஓபனாகக் கூறியுள்ளது கோலிவுட்டில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பெரும்புயலைக் கிளப்பியுள்ளது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X