Don't Miss!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தர்ஷன்-சனம் காதல் முறிவு.. அமைதியை பலவீனமாக நினைக்க வேண்டாம்.. முதல் முறையாக மவுனம் கலைத்த ஷெரின்!
சென்னை: தர்ஷன் - சனம் ஷெட்டி இடையிலான காதல் முறிவு குறித்து நடிகை ஷெரின் முதல் முறையாக பேசியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மீண்டும் பிரபலமானவர் நடிகை ஷெரின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுடன் நெருங்கி பழகினார்.
தர்ஷனை ஒரு தலையாகவும் காதலித்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன், ஏற்கனவே நிச்சயம் செய்திருந்த தனது காதலியான சனம் ஷெட்டியை புறக்கணித்தார்.
ஷெரினுடன் நெருக்கம்
அவரை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார். இந்த விவகாரம் போலீஸ் கோர்ட் என சென்றதால் மீடியாக்களுக்கு வந்தது. தர்ஷன், சனம் ஷெட்டியை பிரிய பிக்பாஸ் வீட்டில் அவருக்கு கிடைத்த சில பெண் தோழிகளின் நட்பே காரணம் என்றும் கூறப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே ஷெரினுடன் நெருக்கமாக இருந்தார் தர்ஷன்.
ஷெரின் விளக்கம்
அப்போதே சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கப்பட்டார். இதனால் சனம் ஷெட்டியுடனான காதலை தர்ஷன் முறித்துக் கொள்ள ஷெரின் தான் காரணம் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்து வந்தன. மேலும் ஷெரினை திட்டித் தீர்த்தும் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை ஷெரின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஷெரின் எச்சரிக்கை
அதில் என் குடும்பத்தாரை எதுவும் பேசாதீர்கள் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் உலகத்தில் இந்த இருவருக்குமான காதல் முறிவை விட பெரிய பிரச்சனைகள் எல்லாம் உள்ளது என்றும் நக்கலாய் பேசியிருக்கிறார். அதோடு நான் எதுவும் பேசாமல் இருப்பதால் அதை என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறார் ஷெரின்.
வாய்திறந்த ஷெரின்
காதல் முறிவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்றும் கூலாக கூறியிருக்கிறார். சனம் ஷெட்டி - தர்ஷன் காதல் முறிவுக்கு ஷெரின் தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்ட நிலையில் அதுதொடர்பாக முதல் முறையாக அறிக்கை மூலம் வாய் திறந்து எனக்கும் அந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார் ஷெரின்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!