கறார் கண்ணம்மா காஜலை கை கழுவிய டோலிவுட்
ஹைதராபாத்: காஜல் அகர்வால் ஓவராக சம்பளம் கேட்பதால் தெலுங்கு திரையுலகம் அவரை கை கழுவியுள்ளதாம்.
காஜல் அகர்வாலை பெரிய நடிகையாக்கியது தெலுங்கு திரையுலகம் தான். தெலுங்கு மூலம் தான் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது என்று கூறலாம்.
விஜய்யின் துப்பாக்கி படத்தில் இருந்து தான் காஜலுக்கு தமிழில் மார்க்கெட் பிக்கப்பாகி உள்ளது. இதையடுத்து அவர் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா மற்றும் மீண்டும் விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கறார் காஜல்
காஜல் சம்பள விஷயத்தில் கறாராக உள்ளாராம். பெரிய்ய தொகையை கொடுத்தால் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம்.

பெரிய படங்கள் மிஸ்
சம்பள விஷயத்தில் அவர் கறாராக இருப்பதால் தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பு கை நழுவிப்போனது.

புறக்கணித்த டோலிவுட்
காஜல் ஓவர் சம்பளம் கேட்பதால் அவரை தெலுங்கு திரையுலகம் கை கழுவிவிட்டதாம். தற்போது அவர் கையில் ஒரு தெலுங்கு படம் கூட இல்லை.

காதல்
காஜல் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை காதலிப்பதாகவும், அதனால் தான் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











