Don't Miss!
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரிஷாவும், ஆட்டுகுட்டியும்!
இந்தியா முழுவதும் 80க்கும் மேற்பட்ட படங்கள் புதுச் சிக்கலில் தொக்கி நிற்கின்றன.மும்பை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள ஒரு உத்தரவால் வந்த வினை இது.
படத்தில் விலங்குகள் காட்டப்பட்டிருந்தால், அப்படத்திற்கு பிராணிகள் நலவாரியத்திடமிருந்து ஆட்சேபனை இல்லை சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.அப்போதுதான் அப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்க முடியும்.
வடிவேலு முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள இம்சை அரசன் 23ம் புலிகேசியும்இந்த சிக்கலில் சிக்கித் தவித்தது. உயர்நீதிமன்றத்தில் கூட வழக்குப் போட்டிருந்தனர்.ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. பின்னர் முதல்வர் கருணாநிதி தலையிட்டு, மத்தியசுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாவிடம் பேசி படத்தை வெளியே கொண்டு வர
உதவினார்.
இந்தப் படத்தில் விலங்குகளை விலாவாரியாக யூஸ் பண்ணவில்லை என்றாலும் கூடஒரே ஒரு ஆட்டுக்குட்டியால் வந்தது வினை. நாயகி திரிஷா, படம் முழுவதும் ஒருஆட்டுக்குட்டியுடன் வருகிறாராம். இந்த ஆட்டுக்குட்டி, திரிஷாவின் கையில், மடியில்தவழ்ந்து விளையாடுகிறதாம்.
திரிஷாவின் பிடியில் சிக்கியுள்ள ஆட்டுக்குட்டியை சிரமப்படுத்தி படம்எடுத்திருப்பீர்கள் என்று கூறிய தணிக்கை வாரியம், பிராணிகள் நல வாரியம் ஓ.கே.சொன்னால்தான் சான்றிதழ் என்று திருப்பி அனுப்பி விட்டார்களாம் சம்திங் சம்திங்படத் தயாரிப்பாளர்களை.
சும்மா வச்சுக்கிட்டதுக்கே இந்தப் பஞ்சாயத்து என்றால் ஆட்டுக்கார அலமேலுபடத்தை இப்போ எடுத்தால் என்ன ஆகும்?