பறக்குது திரிஷா கொடி!
நடிகர்களுக்கு இருப்பதைப் போல தமிழ் நடிகைகளுக்கு ரசிகர் மன்றம்இருப்பதில்லை. தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் ரொம்ப காலம் இருந்த குஷ்புவுக்குகோவில் கட்டி அழகு பார்த்தவர்கள் நமது ரசிகர்கள.
சிம்ரனுக்கும் அதே அளவிலான அன்பைக் காட்டியவர்கள் ரசிகப் பெருமக்கள்.ஆனால் அவருக்கு தனி ரசிகர் மன்றம் உருவாகவில்லை.
ஜெஸ்ஸி என்பவர்தான் இதன் தலைவி. இதன் செயலாளராக ராம்ராஜம்,பொருளாளராக சுபாஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மன்றத்தைவரவேற்ற திரிஷா, ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள், பாலாபிஷேகம் போன்றவைஎல்லாம் வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்தார்.
அடுத்த கட்டமாக இப்போது மன்றத்திற்கென கொடியை உருவாக்கியுள்ளனர். நீலம்மற்றும் சிவப்பு வண்ணத்தில் கொடி உருவாகியுள்ளது. நடுவில் திரிஷாவின் உருவம்நட்சததிரத்தின் நடுவில் அசத்தலாக ஜொலிக்கிறது.
இதுதவிர கட் அவுட், பேனர்கள் என தூள் கிளப்பியுள்ளனர் இந்த ரசிகை மன்றத்தினர்.இதைப் பார்த்து ஹீரோ ஜெயம் ரவியின் ரசிகர்கள் பொறாமைப்படுவதையும் பார்க்கமுடிகிறது.
மேலும் இந்த மன்றத்திற்கென தனியாக இணையதளத்தை தொடங்கியுள்ள ரசிகைகள்விரைவில் ரத்த வங்கி, அனாதை இல்லம், முதியோர் இல்லம் ஆகியவற்றையும்தொடங்கப் போகிறார்களாம்.
அவர்களுக்கு மெம்பர் கார்டை அனுப்பி வைத்து வருகிறார்கள்.
அப்படிப் போடு போடு போடு....!


Click it and Unblock the Notifications