காலையிலேயே துடைப்பம், மம்பட்டியுடன் கிளம்பிய த்ரிஷா
சென்னை: சமந்தா விடுத்த சுத்தமான இந்தியா சவாலை ஏற்று த்ரிஷா இன்று காலை தாம்பரம் அருகே உள்ள ஒரு இடத்தை சுத்தம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி காந்தி ஜெயந்தி அன்று சுத்தமான இந்தியா திட்டத்தை துவங்கி வைத்து பிரபலங்களுக்கு சவால் விடுத்தார். அவர்களும் அவரின் சவாலை ஏற்று பொது இடங்களை சுத்தம் செய்தனர். இதே போன்று பலரும் பலருக்கும் சுத்தமான இந்தியா சவாலை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றை சுத்தம் செய்தார் நடிகை சமந்தா. பின்னர் அவர் த்ரிஷாவுக்கு சவால் விடுத்தார்.

த்ரிஷா
சமந்தா விடுத்த சுத்தமான இந்தியா சவாலை த்ரிஷா இன்று ஏற்று தனது பங்கிற்கு ஒரு இடத்தை சுத்தம் செய்தார்.

தாம்பரம்
சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான இ.எப்.ஐ. உடன் சேர்ந்து அவர் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில் அமையவுள்ள விலங்குகள் இல்லத்திற்கான இடத்தை சுத்தம் செய்தார்.

காலை
இன்று காலை நாட்டிற்காக ஒரு நல்ல காரியத்தை செய்த த்ரிஷாவுக்கு அது திருப்தி அளித்துள்ளதாம்.

சுத்தம்
த்ரிஷா தொண்டு நிறுவனத்தினருடன் சேர்ந்து துடைப்பம், மம்பட்டி எடுத்து வேலை செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











