Don't Miss!
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர் விழா.. சிறப்பு விருந்தினர் த்ரிஷா!
டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்றதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
நடிகை த்ரிஷா இப்போது கனடா சென்றுள்ளார். அங்கு தமிழர் அமைப்பு ஒன்று நடத்தும் விழாவில் பங்கேற்கிறார்.
ஆனால் இவர்கள் ராஜபக்சேவுக்கு சாதகமாக செயல்படும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என்பதை பிற தமிழ் அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஈழத்தில் இறுதிப் போருக்குப் பின் வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. அவர்களின் போராட்டங்கள் காரணமாக இலங்கை அரசு பல்வேறு சர்வதேச அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது.
இந்தப் போராட்டங்களை பலவீனப்படுத்த, தமிழரின் பலவீனமான சினிமாத் துறையில் பெரும் பணத்தை பாய்ச்சுகின்றனர்.
பல்வேறு மறைமுக வழிகளில் ராஜபக்சே குடும்பத்தினர் தங்கள் பணத்தை தமிழ் திரைத்துறையில் முதலீடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்த சூழ்ச்சிகள் புரியாமல் தமிழ் திரைத்துறையினர் அவர்கள் வலையில் விழுந்துவிடுகின்றனர்.
இப்போது த்ரிஷாவும் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் போலிருக்கிறது. காரணம் முன்பு சிங்கள அரசு கூப்பிட்டும் இலங்கை போக மறுத்தவர்தான் த்ரிஷா என்பது நினைவிருக்கலாம்.