twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதுசா ஐஸ்க்ரீமை அறிமுகப்படுத்திவிட்டு உண்ணாவிரதத்துக்கு வந்த த்ரிஷா!

    By Shankar
    |

    சென்னை: நடிகர் சங்கம் இன்று நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். ஆனால் அதற்கு முன் அவர் கலந்து கொண்டது ஒரு ஐஸ் க்ரீம் அறிமுக நிகழ்ச்சி.

    இன்றைய உண்ணாவிரதத்தில் முன்னணி நடிகைகள் யாருமே கலந்து கொள்ளவில்லை. உண்ணாவிரதமென்பது ஒரு சடங்காகிவிட்டதால் யாருமே அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது.

    தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் நடிகைகள் நயன்தாரா, ஸ்ரேயா, ஹன்ஸிகா, தமன்னா, வேதிகா, கார்த்திகா, லட்சுமி மேனன், டாப்சி போன்ற நடிகைகள் உண்ணாவிரதப் பந்தல் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

    ஆனால் நடிகை த்ரிஷா மட்டும் வந்தார். அதற்கு முன் இந்த உண்ணா விரதம் நடந்த இடத்துக்கு அருகில் இருக்கும் ஹயாத் ரெசிடென்சி ஹோட்டலுக்குச் சென்றார். அங்கே ஏற்கெனவே ஒப்புக் கொண்ட ஐஸ்க்ரீம் அறிமுக விழாவில் பங்கேற்று, புதிய வகை ஐஸ்க்ரீமை அறிமுகப்படுத்தினார் (இதற்கு கணிசமான கட்டணம் உண்டு).

    அங்கே சில மணி நேரங்கள் கழித்த பிறகு, நடிகர் சங்க உண்ணாவிரதத்துக்கு வந்தார்.

    English summary
    Trisha came to Nadigar Sangam's fast after launched an Ice Cream brand at Hayat Residency.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X