மாப்பிள்ளை விவகாரம்.... அம்மாவுடன் த்ரிஷா மோதல்?

த்ரிஷாவுக்கு திருமணம் என்று நேற்று பரபரப்பாக செய்தி வெளியான நிலையில், அன்று மாலையே அதை மறுத்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டார் த்ரிஷா.
த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்த விவரத்தை மீடியாவுக்கு தகவலாகச் சொன்னவர் த்ரிஷாவின் அம்மா உமா. ஆனால் இதனை அடியோடு மறுத்து வருகிறார் த்ரிஷா.
இதற்குக் காரணம் மாப்பிள்ளை யார் என்பதி்ல இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல்தானாம்.
காதல் திருமணம்தான் செய்வேன் என்று நீண்ட நாட்களாகக் கூறிவரும் த்ரிஷா, இப்போது தனது மனதுக்குப் பிடித்தமான ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளாராம். தனது மனதிலிருப்பதை சமீபத்தில் பேட்டியாகவும் கொடுத்திருந்தார் த்ரிஷா.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில்தான், த்ரிஷாவுக்கு வரன் பார்த்திருப்பதாகவும், மணமகன் சென்னை தொழிலதிபர் என்றும் உமா கிருஷ்ணன் பத்திரிகைகளுக்கு செய்தியை கசியவிட்டிருந்தார்.
இதில் கடுப்பான த்ரிஷா, மீண்டும் தன் திருமண செய்திக்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த அம்மா - மகள் சண்டையில் அகப்பட்டுக் கொண்டது மீடியாதான்!


Click it and Unblock the Notifications











