Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
அதிக சம்பளம் கேட்டதால் மோகன்லால் படத்திலிருந்து த்ரிஷா நீக்கம்!!
சமர் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. பூலோகம், என்றென்றும் புன்னகை என மேலும இரு படங்கள் அவர் கைவசம் உள்ளன.
இந்நிலையில் மோகன்லால் ஜோடியாக மலையாள படமொன்றில் நடிக்க திரிஷாவுக்கு வாய்ப்பு வந்தது. அவர் இதுவரை மலையாளப் படத்தில் நடிக்கவில்லை. முன்பு அப்படி வந்த பல வாய்ப்புகளை த்ரிஷா கண்டுகொள்ளவே இல்லை.
இந்த நிலையில் மோகன்லால் படத்துக்கு திரிஷா பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் ஜோஷி கருதியதால் அவரை ஒப்பந்தம் செய்ய பேசியுள்ளனர்.
திரிஷாவும் நடிக்க ஒப்புக்கொண்டாராம். சம்பளம் பற்றி பேசியபோது திரிஷா ரூ. 40 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. மலையாள திரையுலகின் மார்க்கெட் சிறியது. 40 லட்சம் சம்பளம் கொடுத்தால் கட்டுப்படியாகாது என தயாரிப்பாளர் கருதினார். மம்முட்டி, மோகன்லாலுக்கே அதிகபட்சம் ரூ 1 கோடி வரைதான் சம்பளம் தரப்படுகிறது.
இதையடுத்து படத்தில் இருந்து திரிஷா நீக்கப்பட்டதாக மலையாள பட உலகில் செய்தி பரவியுள்ளது. ஆனால் திரிஷாவின் தாய் உமாவிடம் இதுகுறித்து கேட்டபோது, "திரிஷாவுக்கு மலையாளத்தில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லை. அவர் மலையாளப் படம் எதிலும் நடிக்கவே இல்லையே," என்று ஒரே போடாகப் போட்டார்!!