Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'சொந்த குரல்' திரிஷா!
பாலக்காட்டில் பிறந்த தமிழ்ப் பெண் திரிஷா. தமிழ் பேசத் தெரிந்தாலும் கூட அவர் இதுவரை அதிகம் பேசி வருவது ஆங்கிலம்தான். கலிபோர்னியா கிளி போல வாயைத் திறந்தாலே ஆங்கிலம்தான் அலட்டும். எப்போதாவது தமிழையும் கொஞ்சம் போல பேசி வைப்பார் திரிஷா.
திரைப்படங்களிலும் இதுவரை அவர் சொந்தக் குரலில் டப்பிங் பேசியதில்லை. இந்த நிலையில் முதல் முறையாக அபியும் நானும் படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறாராம் திரிஷா.
ராதா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ் - மோசர் பெயரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம்தான் அபியும் நானும். இப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறாராம் திரிஷா. பிருத்விராஜும் படத்தில் இருக்கிறார். திரிஷாவின் அம்மா கேரக்டரில் ஐஸ்வர்யா நடிக்கிறார்.
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையான இப்படத்தில் சொந்தக் குரலில் பேசப் போகிறார் திரிஷா. தனது கேரக்டருக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருப்பதால்தான் சொந்தக் குரலில் பேச முடிவு செய்தாராம் திரிஷா. சொந்தக் குரலில் பேசி நடித்திருந்தால்தான் விருது கிடைக்கும் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்திலும் சொந்தக் குரலில் பேச முடிவு செய்துள்ளாராம் திரிஷா.