Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சமருக்காக குரல் கொடுக்கும் த்ரிஷா
சென்னை: விஷாலுடன் நடித்துள்ள சமர் படத்தில் த்ரிஷா தன் சொந்தக் குரலில் பேசுகிறாராம்.
த்ரிஷாவுக்கு தமிழ் தெரியும் என்றாலும் அவரது படங்களில் அவருக்கு வேறு யாராவது டப்பிங் பேசி வருகிறார்கள். தனது நீண்ட நாள் நண்பரான விஷாலுடன் சேர்ந்து த்ரிஷா சமர் படத்தில் நடித்துள்ளார். ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் படம் நல்லா வந்திருக்கு என்று இயக்குனர் திரு மகிழ்ச்சியாக உள்ளாராம்.
இது குறித்து திரு கூறுகையில்,
சமர் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இது தவிர டப்பிங் பணியும் நடக்கிறது. இந்த படத்தில் த்ரிஷா தன் சொந்தக் குரலில் பேசுகிறார். ஆயுத எழுத்து, மன்மதன் அம்பு மற்றும் மங்காத்தாவுக்கு பிறகு அவர் சொந்தக் குரலில் பேசும் படம் இது தான் என்று நினைக்கிறேன். விரைவில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். பட ரிலீஸ் தேதியை அப்போது அறிவிப்போம். விஷால், த்ரிஷா, மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஜே.டி. சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்திருப்பது படத்தின் ஹைலட் என்றார்.