Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"ஓட்டுப் போடறது பெரிய கடமை... மும்பைலருந்து வந்தேன்!" - த்ரிஷா
சென்னை: தன் அம்மா உமாவுடன் வாக்குச் சாவடிக்குப் போய் ஓட்டுப் போட்டார் நடிகை த்ரிஷா.
இந்தத் தேர்தலில் முன்னணி நடிகைகள் பலரும் வாக்களிக்கவில்லை என்று கூறப்பட்டது. காரணம் தமிழகத்தில் இவர்களில் பலருக்கு ஓட்டு இல்லை. ஹன்சிகா தன் சொந்த ஊரில் வாக்களித்ததாகக் கூறப்பட்டது.
தமிழ்நாட்டு அரசியலில் கால்பதிக்க முயலும் நமீதா போன்றவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வாக்களிக்க சூரத் போனாரா, சென்னையிலேயே தங்கிவிட்டாரா என்ற தகவலும் இல்லை!
ஆனால் தமிழ் நடிகையான த்ரிஷா தனது வாக்கைப் பதிவு செய்ய மும்பையிலிருந்து ப்ளைட் பிடித்து வந்திருக்கிறார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேராக வீடு சென்றவர், உடனடியாக டிடிகே சாலையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் வாக்களித்தார்.
அவருடன் தாயார் உமாவும் வந்து வாக்களித்தார். வாக்களித்து முடித்ததும் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு கிளம்பினர்.
"ஓட்டுப் போடறது பெரிய கடமை. அதை மிஸ் பண்ணக்கூடாதுன்னுதான் மும்பைலருந்து வந்தேன்," என்றார் த்ரிஷா.
வாழ்க, அந்த கடமை உணர்வு!