அய்யோ பாவம், த்ரிஷாவின் அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லையாம்!
சென்னை: ரஜினிகாந்த் படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.
கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித் ரஜினிகாந்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். தனுஷ் தயாரிக்கும் இந்த படம் கபாலி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டது. நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாகியும் ரஜினி சார் கூட மட்டும் இன்னும் நடிக்க முடியவில்லை என த்ரிஷா அவ்வப்போது கூறி வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் தனது தோழி த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைக்க உள்ளார் என்று கூறப்பட்டது. இது குறித்து த்ரிஷா கூறுகையில்,
ரஜினி சார் படத்தில் நடிக்க இதுவரை யாரும் என்னை அணுகவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











