Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'மதுர' மாதேஷின் இயக்கத்தில் மீண்டும் பேயாக மாறும் திரிஷா?
சென்னை: 'நாயகி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பேய் படத்தில் திரிஷா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
13 வருடங்கள் தாண்டியும் தமிழ் சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வரும் திரிஷா, தற்போது 'நாயகி' என்ற திகில் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.
இதுதவிர தனுஷின் 'கொடி', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'போகி' ஆகிய படங்களும் திரிஷா கைவசம் உள்ளன. இந்நிலையில் 'மதுர' இயக்குநர் மாதேஷ் இயக்கும் புதிய படத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இதுவும் 'நாயகி' போல திகில் படம்தான் எனவும், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் இருந்து துவங்கும் என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் ''முதன்முறையாக ஒரு திகில் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறோம். இது மிகவும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.
இப்படத்தில் 4 பாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.