Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மெகா ஸ்டார் படத்தில் இருந்து திடீரென விலகிய த்ரிஷா... இன்னொரு ஹீரோயின் நடிப்பதுதான் காரணமா?
ஐதராபாத்: சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நடிகை த்ரிஷா திடீரென விலகியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தமிழ் தவிர, தெலுங்கு மலையாளப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சீனியர் நடிகையான த்ரிஷா, இப்போது மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ராம் படத்தில் நடித்து வருகிறார்.
எங்களுக்கு கிடைத்த முதல் விருது டம்ளர்.. அருண் அரவிந்த் பெருமிதம் !
சிரஞ்சீவியின் ஆச்சார்யா
இதை த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இதில் நடிகை ரெஜினா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அவர் சிறப்பாக ஆடியுள்ளதாக சிரஞ்சீவி சமீபத்த்இல் பாராட்டி இருந்தார். இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு ரகசியமாக வைத்திருந்தனர்.
மன்னிப்புக் கேட்டார்
ஆனால், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், பேச்சு வாக்கில், கேஷூவலாக வெளியிட்டு விட்டார் சிரஞ்சீவி. இது பரபரப்பானது. இதையடுத்து இயக்குனரிடம் மன்னிப்புக் கேட்டார் அவர். இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில், அவர் மகன் ராம்சரண் நடிபபதாகக் கூறப்படுகிறது. அவர் ஜோடியாக இன்னொரு ஹீரோயின் நடிக்க இருக்கிறார்.
5 வருடத்துக்குப் பிறகு
இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த த்ரிஷா, சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் 5 வருடத்துக்குப் பிறகு அவர், தெலுங்கு சினிமாவுக்கு வர இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து தான் விலகி விட்டதாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார், நடிகை த்ரிஷா.
வேறுபாடு காரணமாக
இதுபற்றி, 'சில நேரம் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட, விவாதிக்கப்பட்ட விஷயங்கள் திடீரென வேறுவிதமாக மாறிவிடுகிறது. இதனால், படைப்பு ரீதியான வேறுபாடு காரணமாக, சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகி கொள்கிறேன். அந்தப் படக்குழுவுக்கு வாழ்த்துகள். சிறந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை விரைவில் சந்திக்கிறேன் என்று ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
ஹீரோயின் கிடைப்பது
இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிப்பதும் அவருக்கு முக்கியத்துவம் இருப்பதும்தான் த்ரிஷா விலகியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. த்ரிஷா, ஏற்கனவே சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார். சீனியர் ஹீரோக்களுக்கு ஹீரோயின் கிடைப்பது சிக்கலாகி உள்ள நிலையில், த்ரிஷா திடீரென விலகியது, படக்குழுவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!