மீடியாவில் ஆயிரம் பேசிக்குவாங்க.. அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?
சமீபத்தில் ஒரு பத்திரிகையின் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விழாவில் அனைவரின் கண்களையும் பிடித்திழுத்தது, த்ரிஷாவும் அவருடன் கம்போட்டு ஒட்டிய மாதிரியே வந்த தெலுங்கு நடிகர் ராணாவும்!
கைகோர்த்தபடி ஜோடியாக வந்த இருவரும் முன் வரிசையில் அமர, போட்டோகிராபர்கள் ப்ளாஷ் மழை பொழிந்தனர்.
நிகழ்ச்சி முடியும் வரை ஒன்றாக இருந்தவர்கள், முடிந்த பிறகு தனித்தனியாகப் புறப்பட்டார்கள்.
இருவரையும் அனுப்பிவிட்டு தனியாகக் கிளம்பினார் த்ரிஷா அம்மா உமா.
த்ரிஷா - ராணா திருமணம் விரைவில் நடக்கவிருப்பதாக செய்திகள் வருவதும், அவற்றுக்கு த்ரிஷா மறுப்பு தெரிவிப்பதுமாக உள்ள சூழலில், இருவரும் ஜோடியாக வந்து திருமணச் செய்தியை உறுதிப்படுத்தினர்.
திருமணம், ராணாவுடனான உறவு குறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, "நாங்கள் இருவரும் நல்ல புரிந்து கொள்ளலுடன் இருக்கிறோம். மீடியாவில் ஆயிரம் விஷயங்கள் பேசுவார்கள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது", என்றார்.
ஆமா... இல்லைன்னு ஒரு வார்த்தையில பதில் சொல்லப் பழகுங்க தாயி!


Click it and Unblock the Notifications












